அமெரிக்காவின் முதல் கறுப்பின.. வெளியுறவு துறை அமைச்சர் கொரோனாவால் பலி.. யார் இவர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் தனது 84ஆவது வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா பாதிப்பு உலகில் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல நாடுகளும் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வைத்திருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போதைய சூழலில் வேக்சின் மட்டுமே கொரோனா பரவலைத் தடுக்கும் ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.
கிராமவாசி கைது வழக்கு.. ராமநத்தம் ஆய்வாளர் உட்பட 3 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்: மனித உரிமை ஆணையம்
Breakthrough infection
வேக்சின் போட்ட பிறகும் கூட சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை ஆய்வாளர்கள் breakthrough infection என்று குறிப்பிடுகிறார்கள். பெரும்பாலும், breakthrough infectionஇல் கொரோனா பாதிப்பு தீவிரமானதாக இருக்காது. இருப்பினும், அதிலும் தீவிர கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பங்களும் கூட நிகழ்கிறது. அப்படியொரு சம்பவம் தான் அமெரிக்காவில் இப்போது நடந்துள்ளது.
காலின் பாவெல் மறைவு
அமெரிக்காவில் முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தவருமான காலின் பாவெல் தனது 84ஆவது வயதில் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். அமெரிக்க ராணுவத்தில் சேவை புரிந்துள்ள அவர், ஏற்கனவே 2 டோஸ் கொரோனா வேக்சின் போட்டிருந்தார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். காலின் பாவெலின் இந்த திடீர் மறைவுக்கு அமெரிக்கத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ராணுவ ஹீரோ
1991 வளைகுடா போரில் அமெரிக்க வெற்றி பெற்ற பிறகு காலின் பாவெலின் இமேஜ் அமெரிக்காவில் பல மடங்கு உயர்ந்தது. அமெரிக்கர்கள் மத்தியில் காலின் பாவெலுக்கு நல்ல ஒரு இமேஜும் இருந்தது. இதனால் அவர் முதல் கறுப்பின அமெரிக்க அதிபராக வருவார் என்றும் கூட பலரும் எதிர்பார்த்தனர். இருப்பினும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முடிவெடுத்தார்.
தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்
ஜமைக்கா வம்சாவளியைச் சேர்ந்த காலின் பாவெல் வியட்நாம் அதிபர் ரொனால்ட் ரீகனின் ஆட்சியில் அமெரிக்காவின் முதல் கறுப்பின தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அடுத்து வந்த சீனியர் புஷ் ஆட்சியில் அமெரிக்கா ராணுவத்தின் தலைமை தளபதியாக இருந்தார். முதல் கறுப்பின தலைமை தளபதி மற்றும் மிகவும் இளம் வயதில் தலைமை தளபதி பொறுப்பிற்கு வந்தவர் என்ற சிறப்புகளையும் பெற்றிருந்தார்.
முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சர்
இறுதியில் ஜார்ஜ் புஷ் ஆட்சியில் 2001- 2005 அமெரிக்காவின் முதல் கறுப்பின வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவெல் இருந்தார். அமெரிக்காவின் 4 அதிபர்களுடன் - காலின் பாவெல் பணியாற்றியுள்ளார். காலின் பாவெல் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர் என்றாலும் கூட ஒபாமா அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். அதேபோல டிரம்பிற்கு எதிராகப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளின்டன் மற்றும் ஜோ பைடன் ஆகியோருக்கும் ஆதரவு அளித்தார்.
ஈராக் போர்
இவர் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது தான் ஈராக்கில் அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா தொடுத்த போரில் சதாம் உசேன் கொல்லப்பட்டார். ஆனால், ஈராக்கில் எவ்வித அணு ஆயுதங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. பின்னாளில் இது குறித்து காலின் பாவெல் அளித்த பேட்டியில், "அது எனது வாழ்க்கையில் எப்போதும் இருக்கும் ஒரு கருப்புப் புள்ளி. அப்போதும் சரி இப்போதும் சரி அது வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.