நியூ ஜெர்சியில் இந்திய டாக்டர் மர்ம மரணம்! மருத்துவமனை வளாகத்தில் சடலம் கண்டெடுப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள மருத்துவமனையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நந்திகாம் மணிதீப் (28). இவரது பெற்றோர்கள், ஸ்ரீநிவாஸ் மற்றும் பத்மா. நந்திகாம் மணிதீப் எம்.பி.பி.எஸ் படித்த, டாக்டராகும். இதன்பிறகு, முதுகலை பட்டப்படிப்புக்காக அமெரிக்காவின், நியுஜெர்ஸி சென்றிருந்தார். அங்கு, செயிண்ட் பீட்டர்ஸ் பல்கலைக் கழக மருத்துவமனையில் பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில்தான், பணியாற்றிய மருத்துவமனை வளாகத்தில் மர்மமான முறையில், நந்திகாம் மணிதீப் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது.
இவரது மரணம் குறித்து, சிந்தனூர் தாலுகா காந்திநகர் கிராமத்திலுள்ள அவரது பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
நான் குளிக்கப்போய்ட்டேன்.. துரைமுருகன் செம கலாய்.. சோஷியல் மீடியாவில் இப்போ இதுதான் ட்ரெண்ட்
மணிதீப் நியூஜெர்சியிலுள்ள தனது உறவுக்காரர் வீட்டில் தங்கியிருந்து பணிக்கு சென்று வந்தார். வியாழக்கிழமை காலையில் அவர் பணிக்கு சென்ற பிறகு வீடு திரும்பவேயில்லையாம்.
மணிதீப் தந்தை ஸ்ரீநிவாஸ் விவசாயி. சகோதரர், பெங்களூருவில் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இதனிடையே, நந்திகாம் மணிதீப் மர்ம மரணம் தொடர்பாக, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது குடும்பத்தார் கோரிக்கைவிடுத்துள்ளனர்.