அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம் - ஜோ பிடன் தேர்தல் வாக்குறுதி
நான் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன் என ஜோ பிடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன்: தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் கூறியுள்ளார் ஜோ பிடன்.
கொரோனா தடுப்பூசியானது அரசியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளதாகவும் தலைவர்கள் அறிவித்து வருகின்றனர். பீகார் தேர்தலில் பாஜகவின் முக்கிய வாக்குறுதியே இலவச கொரோனா தடுப்பூசிதான். இதை பார்த்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டால் இலவசமாக அனைவருக்கும் போடப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டிலும் சில மாதங்களில் தேர்தல் வர உள்ளதால் முன்கூட்டியே வாக்குறுதி அளித்துள்ளார் முதல்வர் பழனிச்சாமி.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தனது பிரச்சாரத்தின்போது பேசுகையில், தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆனால், அமெரிக்க மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பேசிய ஜோ பிடன், குடியரசுக் கட்சி ஆட்சியில் அதிபராக இருப்பவர் வைரஸை எதிர்த்துப் போராடுவதை கைவிட்டுவிட்டார். மேலும் அவர் அமெரிக்காவை விட்டு வெளியேறுகிறார். நான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் கொரோனாவை கட்டுப்படுத்த கவனம் செலுத்துவேன்.
அமெரிக்க - இந்திய உறவு... போட்டோவுக்கு போஸ் கொடுக்க மட்டுமே பயன்படுத்தினார் ட்ரம்ப்- ஜோ பிடன் புகார்
கொரோனா தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும், மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்படும். மக்கள் இன்சூரன்ஸ் செய்திருந்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி இலவசமாக தடுப்பூசி போடப்படும். செலவினங்களுடன் போராடும் மக்களுக்கு உதவி செய்வோம் என்றார்.