செவ்வாய் கிரகத்தில் கால் பதித்த இன்சைட் விண்கலம்.. புகைப்படமும் அனுப்பியது
Recommended Video
வாஷிங்டன்: அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் நாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது.
செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சியை நாசா அமைப்பு 1976-ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறது. நாசாவின் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சி தொடர்பான 9வது விண்கலம் இன்சைட், இன்று செவ்வாய் கிரகத்தில் கால் பதித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தின் நிலப்பரப்பை விரிவாக ஆய்வு செய்யும் நோக்கத்தில், இன்சைட் விண்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மூன்று கால்களைக் கொண்டது இந்த விண்கலம். மெல்ல மெல்ல தரை இறங்கியது. இறங்கியதுமே, படம் எடுத்து அதை நாசாவுக்கு அனுப்பி உள்ளது. அதை நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
📸 Wish you were here! @NASAInSight sent home its first photo after #MarsLanding:
— NASA (@NASA) November 26, 2018
InSight’s view is a flat, smooth expanse called Elysium Planitia, but its workspace is below the surface, where it will study Mars’ deep interior. pic.twitter.com/3EU70jXQJw
கடந்த மே மாதம் விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த விண்கலம் 548 மில்லியன் கிலோ மீட்டர் அளவுக்கு பயணித்து செவ்வாய் கிரகத்தில் கால் பதித்துள்ளது. ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை நாசா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி இருந்தது.
இனசைட் விண்கலம் வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் கால் பதித்ததும் நாசா விஞ்ஞானிகள் ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.