டீன் ஏஜ் கர்ப்பிணி பெண்ணை கொன்று வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த கொடூரர்கள்
Recommended Video
வாஷிங்டன்: டீன் ஏஜ் பெண் ஒருவரை கொன்று வயிற்றுக்குள் இருந்து குழந்தை எடுத்துச் செல்லப்பட்ட சம்பவம் அமெரிக்கா முழுக்கவுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ பகுதியை சேர்ந்தவர், மெர்லென் ஒசாவோ-லோபஸ் (19). 9 மாத கர்ப்பிணியாக இருந்த இவர், கடந்த 4 வாரங்களுக்கு முன்பாக திடீரென காணாமல் போய்விட்டார். இந்த நிலையில், வீடு ஒன்றின் அருகே, மெர்லென் ஒசாவோ-லோபஸ் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவரது வயிற்றில் இருந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. குக் கன்ட்ரி மருத்துவ பரிசோதகர் நடத்திய உடற்கூறு ஆய்வில், மெர்லென் ஒசாவோ-லோபஸ், கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அவரது வயிற்றை கிழித்து அந்த குழந்தை எடுத்துச் செல்லப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. குழந்தைகளுக்கு இலவசமாக ஆடை வழங்குகிறோம் என கூறி, பேஸ்புக் குரூப் ஒன்று ஆசை காட்டியதன்பேரில், மெர்லென் ஒசாவோ-லோபஸ் அவர்களை சந்திக்க சென்றதாகவும், அப்போது இந்த கொலை நடந்துள்ளதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து தகவல் தெரியவில்லை.
இதுதொடர்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக அமெரிக்க காவல்துறை தெரிவித்துள்ளது.