வன்முறை வேண்டாம்.. அமைதியாக இருங்க.. அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமைதி காக்கும்படி அந்நாட்டு பொதுமக்களுக்கு வலியுறுத்தி உள்ளார். வன்முறையில் ஈடுபடாமல் , பதட்டங்களை தணிக்க உதவுங்கள் என அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டிடம் (கேபிடல்) தாக்கப்பட்டதற்கு டிரம்ப் தான் காரணம் என குற்றம்சாட்டி அவருக்கு எதிராக நீக்க கண்டன தீர்மானம் நிறைவேற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்தது. விவாதத்திற்கு பின் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் காரணமாக அமெரிக்காவில் பதற்றமான சூழல காணப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பிற்கு துப்பாக்கிய ஏந்தி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதேபோல் வாஷிங்டனின் முக்கிய வீதிகள் மற்றும் பொது இடங்கள் ஆகியவற்றில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம் எந்தவொரு வன்முறையும் கூடாது. சட்டத்தை மீறகூடாது, எந்தவிதமான காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ளக்கூடாது. என்று நான் கேட்டுக்கொள்கிறேன் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதியைக் குறைக்கவும் அனைத்து அமெரிக்கர்களையும் நான் அழைக்கிறேன். நன்றி." என கூறியுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டதற்கு அதிபர் டிரம்ப் பொறுப்பேற்கிறார்.. மெக்கார்த்தி எம்பி
அதிபர் ஜோ பிடனின் பதவியேற்புக்கு ஆறு நாட்களே உள்ள நிலையில் டிரம்பை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கண்டன தீர்மானம் நிறைவேற்ப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.