ஐ.நாவில் மோடி இன்று உரை.. பாகிஸ்தானை வெளுத்து வாங்க வாய்ப்பு
Recommended Video
வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் இன்று வெள்ளிக்கிழமை உரையாற்றவுள்ளார்.
74 வது ஐக்கியநாடுகள் பொதுச் சபை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுமுறை பணிகளுக்காக, பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த சில நாட்களாக, அமெரிக்காவில் இருதரப்பு மற்றும் பலதரப்பு சந்திப்புகளை அவர் நடத்தி வருகிறார்.
ஹவுடி மோடி நிகழ்ச்சியில் ட்ரம்புடன் ஒரே மேடையை பகிர்ந்து கொண்ட நிகழ்வும் முக்கியமான ஒன்றாகும்.
இதன் உச்சமாக, இன்று ஐநா பொதுச் சபையில் மோடி உரையாற்றுகிறார். செப்டம்பர் 27 அமெரிக்க நேரப்படி, காலை நியூயார்க்கில் உள்ள ஐநா சபையில் பேசுவார். இதில் பாகிஸ்தானை மறைமுகமாக வெளுத்து வாங்குவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கா கோபம் பற்றி எங்களுக்கென்ன.. நியூயார்க்கில் ஈரான் அதிபரை சந்தித்து பேசிய மோடி
ஐ.நா.வின் அலுவல் நடவடிக்கைகள் உள்ளூர் நேரப்படி காலை 9 மணிக்கு நியூயார்க்கில் தொடங்கும், இந்திய நேரப்படி இது மாலை 6:30 மணியாகும். காலை அமர்வில் 7 வது எண்ணில் பேசுவதற்கு இந்தியாவுக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பிரதமர் நரேந்திர மோடி இந்திய நேரப்படி, இரவு 8:30 முதல் 9:00 மணி வரையிலான காலகட்டத்தில், பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடியின் உரை அரசு சார்பில் பல்வேறு தளங்களில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.