அந்த பெண்தான் வந்து மேலே படுத்தார்.. அமெரிக்காவில் சிறை தண்டனை பெற்ற தமிழக ஐடி ஊழியர் மனைவி குமுறல்
வாஷிங்டன்: விமானத்தில் தூங்கிக்கொண்டிருந்த சக பெண் பயணிக்கு பாலியல் கொடுத்த வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த ஐடி ஊழியருக்கு அமெரிக்காவிலுள்ள நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நிலையில், குற்றச்சாட்டை அவரின் மனைவி மறுத்தார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான பிரபு ராமமூர்த்தி (34) அமெரிக்காவின் டெட்ரியாட் நகரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். எச்-1பி விசா பெற்றவராகும்.
கடந்த ஜனவரி 3ம் தேதி லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ரியாட் நகருக்கு பிரபு ராமமூர்த்தி தனது மனைவியுடன் விமானத்தில் சென்றார். மனைவி ஒரு பக்கம் அமர்ந்திருந்த நிலையில், மற்றொரு பக்கம் இளம் பெண் அமர்ந்திருந்தார்.
Indian national jailed over sex assault on US flight https://t.co/PMonJMJtNu pic.twitter.com/9zFUNlDwQm
— Zoe Leoudaki (@Zoe_Leoudaki) December 14, 2018
இரவு பயணத்தின்போது பயணிகள் பெரும்பாலானோர் தூங்கிய நிலையில், பிரபு ராமமூர்த்தி தனது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண்ணுக்கு பாலியல் சில்மிஷம் கொடுத்துள்ளார். இதை உணர்ந்ததும், அந்த பெண் பதறி எழுந்தார். விமான ஊழியர்களை உதவிக்கு அழைத்தார். அவர்கள் வந்து பார்த்தபோது, அந்த பெண்ணின் சட்டை பொத்தான்கள் கழற்றப்பட்டிருந்ததும், பேண்ட் ஜிப்பும் அவிழ்க்கப்பட்டிருந்தது.
பிரபு ராமமூர்த்தியின் கைகள், தனது பேண்ட்டுக்குள் இருந்ததாக அந்த பெண் புகார் தெரிவித்தார். இதையடுத்து, டெட்ரியாட்டில் விமானம் தரையிறங்கியவுடன் பிரபு ராமமூர்த்தி மீது பாதிக்கப்பட்ட பெண் சார்பில் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு டெட்ரியாட் நகரிலுள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற நிலையில், இன்று நீதிபதி டெர்ரன்ஸ் பெர்க் தண்டனை விவவரத்தை தெரிவித்தார். அதில் பிரபு ராமமூர்த்திக்கு 9 ஆண்குள் சிறை தண்டனை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அரசு தரப்பு 11 வருட சிறை தண்டனை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தண்டனை காலம் முடிந்ததும், பிரபு ராமமூர்த்தி, இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார். ஆனால், பாதிக்கப்பட்ட பெண்தான், தனது கணவர் மீது சாய்ந்து படுத்ததாகவும், குறிப்பாக தொடை பகுதியில் படுத்து கிடந்ததாகவும் கூறுகிறார் அவர். இதனால், அந்த பெண்முக்கு வேறு பக்கம் சீட் கொடுக்குமாறு விமான ஊழியர்களை தாங்கள் கேட்டுக்கொண்டிருந்ததாகவும் பிரபு ராமமூர்த்தி மனைவி கூறி வருகிறர். ஆனால், விமான ஊழியர்களோ, அப்படி எதுவும் கோரிக்கை விடுக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணை சம்பவம் நடந்த பிறகு வேறு சீட்டில் அமர வைத்தோம் என்றும் கூறியுள்ளனர்.