அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2804 பேர் பலி.. இதுவே அதிகபட்ச எண்ணிக்கையாகும்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் 2804 பேர் பலியாகிவிட்டனர். அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கையில் இது மிகவும் அதிகபட்சமாகும்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1.43 கோடியாகும். இதுவரை 2.80 லட்சம் பேர் கொரோனாவால் பலியாகிவிட்டனர். தற்போது மருத்துவமனைகளில் 55 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் அமெரிக்காவில் புதன்கிழமை 1,00,226 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக அமெரிக்காவில் கொரோனாவால் தினமும் பாதிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
சென்னையில் நாள்தோறும் குறையும் கொரோனா.. கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு தயாராகும் மக்கள்!
இதனால் தினமும் கொரோனாவால் பலியாவோரின் எண்ணிக்கை 2 ஆயிரம் அல்லது 3 ஆயிரம் அல்லது 4 ஆயிரம் கூட நெருங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புதன்கிழமை ஒரே நாளில் கொரோனாவால் பலியானோஎண்ணிக்கை 2,804 பேரானது.
இது அமெரிக்காவில் அதிகபட்ச பலி எண்ணிக்கையாகும். ஏப்ரல் 15-ஆம் தேதி ஒரே நாளில் பலி எண்ணிக்கை 2,603 ஆக இருந்தது. அதோடு நேற்றைய தினம் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.