வாஷிங்டனில் டொனாலட் டிரம்ப் ஆதரவாளர்கள் பல்லாயிரக்கணக்கோர் பேரணி-வன்முறை வெடித்தது!
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டனில் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் மில்லியன் மெகா மார்ச் என்ற பெயரில் பல்லாயிரக்க்கணக்கானோர் திரண்டு பேரணி நடத்தினர். இந்த பேரணியில் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையேயான மோதல் வன்முறையாக வெடித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பிடன் வெற்றி பெற்றிருக்கிறார். இதனையடுத்து அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பிடன் பதவியேற்க உள்ளார்.
'கவுண்டர்' பெயரை நீக்க முடியாது- ஜோ பிடனின் கொரோனா தடுப்பு குழு உறுப்பினரான தமிழகத்தின் செலின்!
டிரம்ப் தரப்பு பிடிவாதம்
ஆனால் ஜோ பிடனின் வெற்றியை அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கவில்லை. தங்களிடம் இருந்து வெற்றியை ஜோ பிடன் திருடிவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.
டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணி
இதனிடையே மில்லியன் மெகா மார்ச் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் டொனால்ட் டிரம்ப்புக்கு ஆதரவாக அவரது ஆதரவாளர்கள் பேரணி நடத்தி வருகின்றனர். வாஷிங்டனில் பல்லாயிரக்கணக்கான டிரம்ப் ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு அவருக்கு ஆதரவாகவும் தேர்தல் முடிவுகளுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
வாஷிங்டனில் வன்முறை
மார்ச் ஃபார் டிரம்ப், ஸ்டாப் தி ஸ்டீல் போன்ற பெயர்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்தும் பேரணிகளால் அமெரிக்காவில் அசாதாரண நிலை உருவானது. இந்த நிலையில் Violence erupts in Washington as protesters clash with Trump supporters என்ற குழுவினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
வன்முறையால் பதற்றம்
டிரம்ப் ஆதரவாளர்களின் உடைமைகளை பறித்து எதிர்ப்பாளர்கள் தீ வைத்து கொளுத்தினர். இதையடுத்து பெரும் பதற்றம் நிலவியது. சம்பவ இடங்களுக்கு போலீசார் விரைந்து சென்று நிலைமையை கட்டுப்படுத்தினர்.