செவ்வாயில் புதிய ஏரிகள்... விண்வெளியில் மிதக்கும் சிறுகோள்... 2020-ன் அறிவியல் அதிசயங்கள்!
வாஷிங்டன்: இந்த 2020-ம் வருடம் மனிதர்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடியாக அமைந்தாலும், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள் அரங்கேறியுள்ளன. செவ்வாய் கிரகத்தில் புதிய தண்ணீர் ஏரிகள் இருப்பது முதல் பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்யப்பட்டு உள்ளன.
நிலவில் நீர் இருப்பது சத்தியமானது, மனித தொண்டையில் இருக்கும் புதிய சுரப்பி, விண்வெளியில் மிதக்கும் புதிய சிறுகோள் என பல்வேறு கண்டுபிடிப்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.
அறிவியல் கண்டுபிடிப்புகள்
2020-ம் ஆண்டின் இறுதி பகுதியை நெருங்கி வந்து விட்டோம். இந்த ஆண்டு கொரோனா என்னும் கொடிய அரக்கனை நம் மீது சுமத்தி விட்டு விடைபெறுகிறது. இந்த வருடம் பல துன்பங்களை சந்தித்தாலும், பல்வேறு புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் நமக்கு ஆறுதல் அளிக்கின்றன.இந்த வருடத்தில் செவ்வாய் கிரகத்தில் புதிய நீர் ஏரிகளைக் கண்டறிவது முதல் தொண்டையில் ஒரு புதிய உறுப்பைக் கண்டுபிடிப்பது வரை புதிய கண்டுபிடிப்புகள் அரங்கேறி உள்ளன. இந்த ஆண்டில் அரங்கேற்றப்பட்ட புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை பற்றி காண்போம்.
புதிய ஏரிகள்
உலக நாடுகள் பல செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொண்டிருக்கும் நேரத்தில், செவ்வாய் கிரகத்தில் மேற்பரப்பில் மறைந்து இருந்த மூன்று உப்பு நீர் ஏரிகளின் கண்டுபிடிப்பு அங்கு மனிதன் வாழ தகுதி உள்ள இடம்தான் என்பதை தீர்மானிக்க உதவியது.செப்டம்பர் பிற்பகுதியில் நேச்சர் வானியல் வெளியிட்ட ஆய்வறிக்கையியல், 'ஆராய்ச்சியாளர்கள் செவ்வாயில் மேலும் மூன்று ஏரிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பெரிய நீர்த்தேக்கம் தவிர இந்த 3 ஏரிகள் அங்கு இருப்பது உறுதியாகி உள்ளது.
ஐந்தில் ஒரு பங்கு
இந்த ஏரிகள் சுமார் 75,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளன - இது ஜெர்மனியின் ஐந்தில் ஒரு பங்கு அளவு. "மிகப்பெரிய, மத்திய ஏரி, 30 கிலோமீட்டர் குறுக்கே அமைந்துள்ளது, மேலும் மூன்று சிறிய ஏரிகளால் சூழப்பட்டுள்ளது, ஒவ்வொன்றும் சில கிலோமீட்டர் அகலம் கொண்டது என்று அந்த அறிக்கை கூறியது.
நிலவில் ஓர் கண்டுபிடிப்பு
இந்த ஆண்டு அக்டோபரில் நாசா நிலவில் அற்புதமான கண்டுபிடிப்பு அறிவித்தது. நிலவின் மேற்பரப்பில் பூமியிலிருந்து தெரியும் மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான கிளாவியஸ் பள்ளத்தில் நீர் மூலக்கூறுகள் இருப்பதை இது உறுதிப்படுத்தியது. சஹாரா பாலைவனமானது சந்திர மண்ணில் சோஃபியா கண்டறிந்ததை விட 100 மடங்கு நீரைக் கொண்டுள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.
15,400 சதுர மைல்களுக்கு (40,000 சதுர கிலோமீட்டர்) நிலவில் நிலப்பரப்பில் பனி வடிவத்தில் தண்ணீரைப் பிடிக்க முடியும் என்று கொலராடோ பல்கலைக்கழகத்தின் பால் ஹெய்ன் தலைமையிலான குழு தெரிவித்துள்ளது. முந்தைய மதிப்பீடுகளை விட இது 20 சதவீதம் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
மனிதர்களுக்கு தீங்கு
இந்த வருடம் நெதர்லாந்தின் விஞ்ஞானிகள் மனித தொண்டையில் தற்செயலாக ஒரு புதிய உறுப்பைக் கண்டுபிடித்தனர், இது தொண்டையின் மேல் பகுதியில் ஆழமாக அமைக்கப்பட்ட உமிழ்நீர் சுரப்பிகளின் தொகுப்பு. ஆகும். நெதர்லாந்து புற்றுநோய் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் புரோஸ்டேட் புற்றுநோயைப் படிக்க பயன்படுத்தும்போது இந்த கண்டுபிடிப்பு செய்யப்பட்டது.
நோயாளிக்கு சிக்கல்
புற்றுநோய் சிகிச்சைக்கு இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாக இருக்கலாம் என்று அந்த ஆய்வு இணை ஆசிரியர் கூறினார்.குறைந்தது 100 நோயாளிகளை பரிசோதித்த பின்னர் தொண்டையில் சுரப்பிகள் இருப்பதை உறுதிப்படுத்தியது.நோயாளிகளுக்கு சாப்பிடுவது, விழுங்குவது அல்லது பேசுவதில் சிக்கல் இருக்கலாம், இது ஒரு உண்மையான சுமையாக இருக்கலாம் என்று நெதர்லாந்து விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
விண்வெளியில் மிதக்கும் சிறுகோள்
வானியலாளர்கள் ஒரு தனித்துவமான உலோக சிறுகோள் விண்வெளியில் மிதப்பதைக் கண்டறிந்தனர், அவை பூமிக்குக் கொண்டுவரப்பட்டால், 10,000 குவாட்ரில்லியன் டாலர் (10,000,000,000,000,000,000 டாலர்) வரை மதிப்பு பெறலாம். அதாவது இது 2019 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் சுமார் பத்தாயிரம் மடங்கு அதிகம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு சூரியனைச் சுற்றிவரும் '16 சைக் 'என்ற உலோகம் நிறைந்த அந்த சிறுகோள் 10,000 குவாட்ரில்லியன் டாலர் (10,000,000,000,000,000,000 டாலர்) இரும்புச்சத்து இருக்கக்கூடும் என்று நாசா கூறியுள்ளது. சிறுகோள் பெரும்பாலும் இரும்பு மற்றும் நிக்கலால் ஆனதாக இருக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
குள்ள நட்சத்திரம்
இதேபோல் வியாழனை போன்ற அளவில் உள்ள குள்ள நட்சத்திரம் சுற்றி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (ஜாக்ஸா) மற்றும் டோஹோகு பல்கலைக்கழகம் ஆகியவைஎலிகள் குறித்து நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் போது, வயதானதை எதிர்த்துப் போராட உதவும் ஒரு புரதத்தைக் கண்டுபிடித்தனர். இந்த புரதம் அல்சைமர் மற்றும் நீரிழிவு போன்ற வயது தொடர்பான நோய்களுக்கு சிகிச்சையளிக்க மருந்துகளின் வளர்ச்சிக்கு உதவும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
பூமி மட்டுமா வாழ ஏற்றது?
தி அஸ்ட்ரானோமிகல் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, பால்வீதி மண்டலத்தில் 300 மில்லியன் வாழக்கூடிய பல கிரகங்கள் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கபட்டுளது. இந்த 'வாழக்கூடிய' கிரகங்கள் பழையவை, கொஞ்சம் பெரியவை, சற்று வெப்பமானவை மற்றும் பூமியை விட ஈரமானவை என்று கண்டுபிடிக்கப்ட்டது. மனிதர்கள் எழுத்துக்கள் மற்றும் சொற்களைக் கற்றுக் கொள்வதற்கு வசதியாக மனித மூளையின் ஒரு பகுதியில் முன் கம்பி எனப்படும் நெட்வொர்க் இருப்பதும் , இது கடிதங்களையும் சொற்களையும் பார்ப்பதற்கு மூளையை வேறுபடுத்துகிறது எனவும் ஆராய்ச்சியாளர்கள் புதிதாக கண்டறிந்தனர். இதேபோல் அறிவியல் உலகில் இந்த ஆண்டு பல்வேறு கண்டுபிடிப்புகள் தெரியவந்தன.