ஐராவதம் மகாதேவனுக்கு அமெரிக்காவில் நினைவாஞ்சலி கூட்டம்
வாஷிங்டன்: மறைந்த கல்வெட்டியல் அறிஞரும், முன்னாள் தினமணி ஆசிரியருமான ஐராவதம் மகாதேவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது.
வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவை சார்பில் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ் கல்வெட்டு ஆராய்ச்சியாளரும், தொல்வரலாற்றியல் அறிஞருமான ஐராவதம் மகாதேவன் நவம்பர் 26 அன்று இயற்கை எய்தினார். அவரது மறைவிற்கு, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இந்த வாரம் வெள்ளிகிழமை இரவு 9:00 மணிக்கு கிழக்கு நேரத்தில் பேரவை இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்துள்ளது. நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே இந்த அஞ்சலிக் கூட்டத்தில் பல்வழி அழைப்பின் வாயிலாகக் கலந்து அன்னாருக்கு அஞ்சலி செலுத்த அழைக்கிறோம்
தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்களுக்கு கடந்த 2001ம் ஆண்டு டெட்ராய்ட் பேரவைத் தமிழ் விழாவில் மாட்சிமை விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
சுந்தரபாண்டியன் சபாபதி ,
செயலாளர், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை.