ஜோ பிடன் வெற்றியை சூசகமாக ஒப்புக்கொண்ட டிரம்ப்... பிடிவாதத்தை தளர்த்தும் வகையில் டிவிட்..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடான வழியில் ஜோ பிடன் வெற்றி பெற்றதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஜோ பிடனின் வெற்றியை ஏற்க மறுத்து வந்த டிரம்ப் முதல்முறையாக பிடனின் வெற்றியை ஒப்புக்கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். இதன் மூலம் பிடிவாதத்தை தளர்த்தி யதார்த்த நிலையை உணரத் தொடங்கியுள்ளார் டிரம்ப்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வாக்கு எண்ணிக்கையின் போது கண்காணிப்பாளர்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை என்றும் போலி ஊடகங்கள் சிலவற்றின் உதவியோடு பிடன் இந்த வெற்றியை பெற்றுள்ளதாகவும் சாடியிருக்கிறார். டிரம்பின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருந்தாலும் பிடனின் வெற்றியை அவர் ஏற்றுக்கொண்டதை இந்த பதிவு காட்டுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாகியதில் இருந்தே முரண்டு பிடித்து வந்த டிரம்ப் முதல்முறையாக பொதுவெளியில் பிடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளும் வகையில் பதிவிட்டிருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இது என்ன சோதனை... குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு... கேரள உள்ளாட்சித் தேர்தல் களேபரம்..!
இதனிடையே இந்த விவகாரத்தில் இன்னும் தனது இறுதியான முடிவை டிரம்ப் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் குற்றச்சாட்டு அமெரிக்க தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளதோடு அடியோடு டிரம்பின் புகாரை நிராகரித்துள்ளனர்.
ஆனாலும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற கதையாக நடந்துகொள்கிறார் டிரம்ப். அமெரிக்க வரலாற்றில் இது போன்ற ஒரு நிகழ்வு இதற்கு முந்தையக் காலத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.