வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் ஒரே நாளில் 61,640 பேருக்கு கொரோனா - இந்தியாவில் ஒருநாள் பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்தது

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்காவில் ஒரே நாளில் 61,640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாள் கொரோனா பாதிப்பு 24,879 ஆக உள்ளது.

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,21,55,395 ஆக அதிகரித்தது. கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 5,51,183 ஆக உள்ளது.

அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 61,640 ஆகும். இதனால் அமெரிக்காவில் மொத்தமாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 31,58,724 ஆக உயர்ந்துள்ளது.

37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம் 37 மாவட்டத்திலும் பரவியது கொரோனா.. 9 மாவட்டங்களில் 100ஐ கடந்த பாதிப்பு.. முழு விவரம்

யு.எஸ். பிரேசில் நிலவரம்

யு.எஸ். பிரேசில் நிலவரம்

அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,34,853 என உயர்ந்திருக்கிறது. அமெரிக்காவை தொடர்ந்து பிரேசிலில் ஒருநாள் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்துவிட்டது. பிரேசிலில் 24 மணிநேரத்தில் மட்டும் 41,541 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. பிரேசிலில் கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 17,16,196 ஆக அதிகரித்திருக்கிறது.

24, 879பேருக்கு கொரோனா

24, 879பேருக்கு கொரோனா

உலக நாடுகளில் கொரோனா பாதிப்பில் இந்தியா தொடர்ந்து 3-வது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 24, 879பேருக்கு கொரோனா உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் மொத்தம் 487 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,67,.296 ஆகவும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 21,129 ஆகவும் உயர்ந்தது.

4-வது இடத்தில் தென்னாப்பிரிக்கா

4-வது இடத்தில் தென்னாப்பிரிக்கா

ஒருநாள் கொரோனா பாதிப்பில் தென்னாப்பிரிக்கா 4-வது இடத்தில் உள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 8,810 பேருக்கு கொரோனா உறுதியானது. தென்னாப்பிரிக்காவில் ஒரே நாளில் 100 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர். தென்னாப்பிரிக்காவில் 2,24,665 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,602 பேர் கொரோனாவால் மாண்டுள்ளனர்.

Recommended Video

    China VS America | China-விற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் America | White House
    மகாராஷ்டிரா, தமிழகத்தில் மோசமான பாதிப்பு

    மகாராஷ்டிரா, தமிழகத்தில் மோசமான பாதிப்பு

    இந்தியாவில் மகாரஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களில் மிக மோசமாக பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிராவில் மொத்தம் 2,23,724 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மாநிலத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 9,448 ஆகவும் அதிகரித்திருக்கிறது. 2-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 1,22,350 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 1700 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    English summary
    United States reported 61,640 new Coronavirus cases.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X