இந்தியாவுக்கு அடுத்த ஷாக்.. அமெரிக்கா போல் வரிபோடும் ஐரோப்பா நாடுகள்? டிரம்ப் கொடுக்கும் பிரஷர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரி போட்டுள்ளார். உக்ரைன் மீது போர் புரிந்து வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது இந்த வரிக்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில் தான் அதே விஷயத்தை காரணம் காட்டி இந்தியாவுக்கு கூடுதல் வரிகளை விதிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடவாடியாக வரிகளை விதித்து வருகிறார். இதில் நம் நாடும் தப்பவில்லை. நம் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரிகளை டிரம்ப் விதித்துள்ளார்.

அமெரிக்கா உடனான வர்த்தக பற்றாக்குறைக்கு 25 சதவீதம், ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் வாங்குவதை சுட்டிக்காட்டி 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை போட்டுள்ளார்.
மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால் நம் நாடு கண்டுக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் அமெரிக்காவை போல் நம் நாட்டின் மீது வரி போடும்படி ஐரோப்பிய நாடுகளை வலியுறுத்தி வருகிறார்.
உக்னைர் மீதான ரஷ்யாவின் போரை ஐரேப்பிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதுமட்டுமின்றி ரஷ்யாவை சமாளிக்க உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் நிதி உதவிகள் செய்து வருகின்றன.
இதனால் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை எப்படி சுட்டிக்காட்டி அமெரிக்கா வரி போட்டதோ? அதேபோல் ஐரோப்பிய நாடுகளும் இந்தியா மீது வரி விதிக்க வேண்டும் என்று டொனால்ட் டிரம்ப் சார்பில் ஐரோப்பிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதேபோல் ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. அதை காரணம் காட்டி இந்தியா மீது 2ம் நிலை பொருளாதார தடைகளையும் விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை சார்பில் வலியுறத்தப்பட்டுள்ளது ஆனால் தற்போது வரை ஐரோப்பிய நாடுகள் இந்த விஷயத்தில் எந்த முடிவையும் எடுக்கவில்லை.












Click it and Unblock the Notifications