அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 2 லட்சம் பேருக்கு கொரோனா; 2830 பேர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனாவின் பேரழிவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் அமெரிக்காவில் மொத்தம் 2,03,386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,830 பேர் கொரோனாவால் உயிரிழந்தும் உள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 6,48,21,047 ஆக உயர்ந்திருக்கிறது. உலகின் கொரோனா மரணங்கள் 15 லட்சத்தை நெருங்கி உள்ளது.
உலக நாடுகளில் இதுவரை மொத்தம் 14,98,318 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,49,24,370.
அமெரிக்காவில்தான் கொரோனாவின் பேரழிவு தொடருகிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 203,386 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 2,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டும் உள்ளது.
சென்னையில் தலைகீழாக மாறிய நிலை.. நாளுக்கு நாள் குறையும் கொரோனா பாதிப்பு
மெக்சிகோவில் கடந்த 24 மணிநேரத்தில் 825 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் 648; இத்தாலியில் 684; பிரேசிலில் 669; ரஷ்யாவில் 589 பேர் கொரோனாவால் 24 மணிநேரத்தில் இறந்துள்ளனர்.
இந்தியாவில் 24 மணிநேரத்தில் மொத்தம் 33,761 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் 498 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.