ரஷ்யாவின் 4 ராணுவ விமானங்களை வானில் தடுத்து நிறுத்திய அமெரிக்காவின் போர் விமானங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அலாஸ்காவின் வான்வெளியில் அத்துமீறி பறந்த ரஷ்யாவின் ராணுவ விமானத்தை அமெரிக்காவின் போர் விமானங்கள் சனிக்கிழமை வானில் இடைமறுத்தி தடுத்து நிறுத்தியது.
இதுகுறித்து வட அமெரிக்கா வான்வெளி பாதுகாப்பு கட்டளையகம் தனது செய்திக் குறிப்பில் கூறுகையில் ரஷ்யாவின் விமானங்கள் அமெரிக்கா அல்லது கனடாவின் வான் வெளியில் நுழைய வில்லை. எனினும் அலாஸ்காவின் எல்மென்டார்பில் உள்ள விமான தளத்திலேயே அவற்றை அமெரிக்காவின் எஃப்-22 ரக போர் விமானங்கள் தடுத்து நிறுத்தின என்று தெரிவித்துள்ளது.
ரஷ்யாவின் டியூ 142 ரக விமானம் இதுவரை 10 முறை அத்துமீறி அமெரிக்காவில் பறந்ததாக இடைமறித்து திருப்பி அனுப்பப்பட்டது.
இதே போல் கடந்த மே 22-ஆம் தேதி அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண வான்பகுதியில் ரஷ்யாவின் 6 போர் விமானங்கள் அத்துமீறி பறந்ததாக அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டளையகம் தெரிவித்துள்ளது.
திடீரென ரஷ்யா சப்போர்ட்.. யுன்எஸ்சியில் இந்தியாவை நிரந்தரமாக சேர்க்க வேண்டும்.. அதிர்ச்சியில் சீனா!
ரஷ்யாவில் கடந்த ஜூன் 19-ஆம் தேதி ரஷ்யாவின் கிழக்கு கடற்கரையோரம் பறந்த அமெரிக்காவின் இரு பி 52 எனும் குண்டு வீசும் திறனுடைய விமானங்களை ரஷ்யா வானில் இடைமறித்தது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் டியூ 142 எனப்படும் டூபோலெப் டியூ 142 ரக விமானமாகும். இது கடல் பகுதியில் ரோந்து செய்யும் விமானமாகும். இவை நீர் முழ்கி குண்டுவீசும் திறன் கொண்டவை.