இந்தியாவுக்கு ஆதரவாக எப்போதும் எங்கள் ராணுவம் உறுதுணையாக இருக்கும்: அமெரிக்கா
வாஷிங்டன்: இந்தியாவுக்கு ஆதரவாக தங்களது நாட்டின் ராணுவம் உறுதுணையாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தென்சீனா கடற்பரப்புக்கு 2 போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. தென்சீனா கடற்பரப்பின் பல பகுதிகளை சீனா தங்களுக்கு உரியது என உரிமை கோருகிறது.
ஆனால் சீனாவின் இந்த அத்துமீறிய உரிமை கோரலை பல்வேறு நாடுகள் கடுமையாக எதிர்க்கின்றன. சீனாவின் இந்த அடாவடித்தனத்தால் தென்சீனா கடற்பரப்பு பதற்றத்துடனேயே இருந்து வருகிறது.
பூட்டானை ஒட்டிய இந்திய எல்லையில் புதிய சர்ச்சையை கிளப்பிய சீனா...டெல்லிக்கு மீண்டும் சிக்கல்!!
தென்சீனா கடற்பரப்பில் தீவுகளை ராணுவ மயமாக்கும் போக்கை சீனா தொடருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் அமெரிக்காவின் போர் விமானங்கள் தென்சீனா கடற்பரப்பில் முகாமிட்டுள்ளன.
இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அமெரிக்கா ராணுவ அதிகாரி, இந்தியாவுடனான சீனாவின் மோதலை சுட்டிக்காட்டி எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவின் ராணுவம் உறுதுணையாகவே இருக்கும் என்றார்.