அமெரிக்காவில் தொடரும் அதி உச்சம்... 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,38,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,30,58,079 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,64,824 ஆகவும் அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,35,36,184 ஆகும். உலக நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் கொரோனாவின் பாதிப்பு அதி உச்சத்தில் இருந்து வருகிறது.
சென்னையில் குறையும் கொரோனா.. 3 இலக்கமான மாயம்.. மாவட்டங்களில் நிலவரம் என்ன?
அமெரிக்காவில் உச்சம்
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,38,188 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,50,404 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு
அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் 819 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 2,73,072. அமெரிக்காவில் இதுவரை 81,07,203 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் பாதிப்பு
அமெரிக்காவை தொடர்ந்து இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 39,036 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதற்கு அடுத்ததாக ரஷ்யாவில் 26,683 பேருக்கும் பிரேசிலில் 24,468 பேருக்கும் இத்தாலியில் 20,648 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் மரணங்கள்
மேலும் ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 459 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் ஒரே நாளில் 444 பேரும் இத்தாலியில் 541 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.