அமெரிக்க அதிபர் தேர்தல்.. டிரம்ப்- ஜோ பிடன்.. முன்னணியில் இருப்பது யார்? வெளியான தகவல்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், எந்த மாநிலத்தில் யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளது என்பது பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்ட கணிப்பில் ஜோ பிடன் முன்னணியில் இருப்பதாக கூறப்படுகிறது.
நவம்பர் 3ம் தேதி நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசுக்கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். துணை அதிபர் வேபாட்ளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதேபோல் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் பதவிக்கு முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் பதவிக்கு இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் தபால் வாக்குகள் போடப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் இன்றைய நிலவரப்படி, யாருக்கு அதிக வெற்றி வாய்ப்பு என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போதைய நிலவரப்படி எதிர்க்கட்சி தலைவரான ஜோ பிடென், அதிபர் டிரம்பை விட அதிக மாகாணங்களில் முன்னணியில் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா வந்தா நல்லதுதான்...இனியெல்லாம் லாக்டவுனே கிடையாது: டிரம்ப்
பிரபல ஆங்கில ஊடகம் கடந்த 14 நாட்களில் 8 மாகாணங்களில் எடுத்த தேர்தல் வாக்கு கணிப்பை வெளியிட்டுள்ளது., ப்ளோரிடா, பெனிசுலவேனியா, மிசிகென், வடக்கு கலிபோர்னியா, அரிஜோனா, விஸ்கோனிசின், லோவா போன்ற மாநிலங்களில் ஜோ பிடென் முன்னணியில் இருக்கிறார். ஓகியோ மாகாணத்தில் டிரம்ப் முன்னணியில் இருக்கிறார். ஜோ பிடனைவிட 0.8 சதவீதம் அதிகம் பெற்று முன்னணியில் இருக்கிறார்.
அதேநேரம் ஜோ பிடென், டிரம்பைவிட ப்ளோரிடா, பெனிசுலவேனியா, மிசிகென், வடக்கு கலிபோர்னியா, அரிஜோனா, விஸ்கோனிசின், லோவா போன்ற மாநிலங்களில் குறைந்த பட்சம் ஒரு சதவீதம் முதல் அதிக பட்சம் 8 சதவீதம் வரை அதிக வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதாக இங்கிலாந்தைச் சேர்ந்த அந்த ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது