அமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா பாதிப்பு-4,084 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் உச்சகட்டமாக ஒரேநாளில் 4,0844 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்காவில் ஒரேநாளில் 2,12,180 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அமெரிக்காவில் மொத்த கொரோனா பாதிப்பு 2,33,58,284 ஆகும்.
அமெரிக்காவில் ஒரே நாளில் 4,084 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 3,89,424 ஆக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக மொத்த கொரோனா பாதிப்பில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. ஆனால் இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 14,898 ஆக மட்டுமே உள்ளது.
பிரேசில், இங்கிலாந்தில் கொரோனா விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. பிரேசிலில் ஒரே நாளில் 61,804 பேரும் இங்கிலாந்தில் 45,533 பேரும் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.