அமெரிக்காவில் தொடரும் உச்சம்- ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா; 2,825 பேர் மரணம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுளது. மேலும் 24 மணிநேரத்தில் அமெரிக்காவில் 2,825 பேர் கொரோனாவால் மாண்டு போயுள்ளனர்.
உலக நாடுகளில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6.5 கோடி ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் உலகம் முழுவதும் மொத்தம் 6,54,99,250 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள்.
அதேநேரத்தில் உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 15 லட்சத்தை தாண்டியது. உலக நாடுகளில் மொத்த கொரோனா மரணங்கள் 15,10,834.
உலக நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் எண்ணிக்கை 4,53,39,750. அமெரிக்காவில் ஒரே நாளில் 2,13,429 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் ஒரே நாளில் 2,825 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்ததாக இத்தாலியில் ஒரே நாளில் 993 பேர்; பிரேசிலில் 776 பேர் பலி; மெக்சிகோவில் 800 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.