சீனாவின் உகான் லேப்ல இருந்துதான்...கொரோனா வைரஸ் பரவியது...ஆதாரங்களை முன்வைக்கும் அமெரிக்கா!
வாஷிங்டன்:சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகங்களில் இருந்தே கொரோனா வைரஸ் தோன்றியிருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
உகான் ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசை ஒத்திருந்த மற்ற தொற்றுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்தது.
சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது.
பள்ளிக்கு போக போகும் 10,12ம் வகுப்பு மாணவர்களே .. பள்ளி கல்வி துறை சொன்ன ஹேப்பி நியூஸ்
ஆட்டம் போடும் கொரோனா
ஒரு ஆண்டை கடந்தும் இன்றும் உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த வைரசுக்கு அச்சாரம் போட்டதே சீனாதான். கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் உலகின் அனைத்து பகுதிகளிலும் கரும்புள்ளியாக மாறி விட்டது. கொரோனா வைரஸ் உகான் நகரிலுள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், சீனா இதை திட்டமிட்டே பரப்பியதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த வைரசை சீன வைரஸ் என்றே கூறி வருகிறார்.
சீனாதான் காரணம்
உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த 13 பேர் கொண்ட சர்வதேச வல்லுனர் குழு கொரோனாவின் தோற்றம் குறித்த ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள சீனாவின் உகான் நகருக்கு சென்றுள்ளது. தனிமைப்படுத்தும் காலம் முடிந்ததும் ஆய்வுகளை அவர்கள் தொடங்க உள்ளனர். இந்த நிலையில் சீனாவின் உகான் நகரில் உள்ள ஆய்வகங்களில் இருந்தே கொரோனா வைரஸ் தோன்றியிருக்கும் என அமெரிக்க வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
சந்தேகம் வலுத்துள்ளது.
இது தொடர்பாக மேலும் கூறியதாவது:- 2019-ம் ஆண்டின் நடுப்பகுதியில் உகான் ஆய்வகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசை ஒத்திருந்த மற்ற தொற்றுகள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனர். இதனாலேயே எங்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. கடந்த 2016-ல் வுஹான் ஆய்வகத்தில் 2016-ல் பேட் கொரோனா வைரஸான RaTG13 சம்பந்தப்பட்ட சோதனைகளை மேற்கொண்டனர்.
மாதிரி ஒன்றாக உள்ளது
இந்த மாதிரி 2020 கொரோனா வைரசுக்கு(96.2%) ஒத்த மாதிரியாக உள்ளது. தொற்றுநோயின் தோற்றம் குறித்த வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை சீனா அரசு வேண்டுமென்றே தடுத்து வருகிறது. சீன ஆய்வக நிபுணர் ஒருவர் சமீபத்தில் சீனாவின் வுஹானில் உள்ள ஒரு ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் தோன்றியதாக கூறினார். அதற்கான ஆதாரம் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் அதன்பிறகு அவர் நாட்டை விட்டே வெளியேற்றப்பட்டார்.
அழுத்தம் தர வேண்டும்
தொற்றுநோயின் தோற்றம் குறித்த வெளிப்படையான மற்றும் முழுமையான விசாரணையை சீனா அரசு வேண்டுமென்ற தடுத்து வருகிறது. கொரோனா தோற்றம் குறித்து கூடுதல் தகவல்களை பெற உலக சுகாதார அமைப்பின் வல்லுனர் குழு சீன அரசிடம் அழுத்தம் தர வேண்டும் என்று அமெரிக்க வெளியுறத்துறை கூறியது.