வாஷிங்டனில் சாலையில் சென்றவர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு.. பலர் படுகாயம்
Recommended Video
வாஷிங்டன் டிசி: அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி நகரில் சாலையில் நடந்து சென்றவர்கள் மீது சரமாரியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏராளமானோர் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்காவின் தலைநகரமாக வாஷிங்டன் டிசி நகரம் உள்ளது. இந்த நகரம் போடாமெக் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்த நகரில் தான் அமெரிக்க நாட்டு மத்திய அரசின் தலைமையமான வெள்ளை மாளிகை உள்ளது. நம்மூர் டெல்லி போல் அமெரிக்காவின் மைய அரசின் நிர்வாகம் வாஷிங்டன் டிசியில் இயங்குகிறது.
இந்நிலையில் சற்று முன்பாக வாஷிங்டன் டிசி நகரில் தெருக்களில் நடந்து சென்று கொண்டிருந்தவர்களை குறிவைத்து மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஏராளமானோர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும், 5 பேர் காயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால் எத்தனை பேர் என்பது குறித்து உறுதியாக தகவல்களை வெளியிடவில்லை.
இது தொடர்பாக பாக்ஸ் -5 சேனல் வெளியிட்டுள்ள தகவலின் படி 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஏராளமானோர் படுகாயம் அடைந்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் அங்கு விரைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.