யாரும் இல்லாட்டி போங்கடா.. தானே தன்னந்தனியே பனிக்கட்டியில் உருண்டு விளையாடிய பாண்டா
உறைபனியில் பாண்டா கரடி ஒன்று உருண்டு புரண்டு விளையாடுகிறது.
வாஷிங்டன்: விளையாட யாருமே இல்லை என்றெல்லாம் கவலைப்படவில்லை அந்த பாண்டா கரடி.. உறைபனியை பார்த்ததும் தனியாகவே அதில் புரண்டு நெளிந்து விளையாட ஆரம்பித்துவிட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் ஸ்மித்சோனியன் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. சுற்றுவட்டாரத்திலேயே ரொம்பவும் ஃபேமஸ் ஆன பூங்கா இது. இங்கு பெய் பெய் என்ற பாண்டா கரடி ஒன்று வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கூண்டில் இருந்த அந்த கரடியை பூங்கா நிர்வாகம் திறந்து விட்டது. அப்போது, திறந்தவெளியில் உறைபனியை பார்த்ததும், சந்தோஷம் தாங்க முடியவில்லை. எப்பவுமே கூண்டிலேயே இருந்ததாலும், திடீரென உறைபனியை பார்த்ததும் உற்சாகமடைந்தது அந்த கரடி.
அடுத்த செகண்டே அந்த பனியில் புரண்டு புரண்டு விளையாடியது. அங்கிருந்த பனி நிறைந்த மரங்களில் ஏறி இறங்கி திரும்பவும் உறைபனியிலேயே குதித்தது. திரும்பவும் ஒரு குட்டிக் கரணம் அடித்து உச்சக்கட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.
உடன் விளையாட யாருமே இல்லாவிட்டாலும், தன்னந்தனியாகவே அந்த உறைபனியை முழுசாக கரடிகுட்டி என்ஜாய் பண்ணியது. கரடியை பார்த்து அங்கிருந்த சுற்றுலா பயணிகள் அதைவிட என்ஜாய் பண்ணினார்கள். இதை வீடியோவாக எடுத்து இணையத்திலும் பதிவிட அது வைரலாகி வருகிறது.