நினைச்சி கூட பார்க்க முடியாது.. சூப்பர் மார்க்கெட்டில் இளம் பெண் செய்த அசிங்கம்.. சிசிடிவியில் ஷாக்
வாஷிங்டன்: நினைத்து பார்க்க கூட முடியாது. அப்படி ஒரு அசிங்கமான செயலை செய்துள்ளார் 20 வயது இளம் பெண் ஒருவர். அதுவும் பலர் நடமாடும் ஒரு பிரபல வால்மார்ட் டிபார்மென்டல் ஸ்டோரில் வைத்து என்றால் நம்ப முடியாதுதான்.
அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரிலுள்ளது வால்மார்ட் ஸ்டோர் கிளை. அங்கு சென்ற கிரேஸ் ப்ரவுன் என்ற 20 வயது இளம் பெண், உருளைக் கிழங்குகள் வைக்கப்பட்டிருந்த பேஸ்கட்டில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதை யதேர்ச்சையாக கடை அதிகாரி ஒருவர் பார்த்துவிட்டார். அதிர்ச்சியடைந்த அவர் உடனே போலீசுக்கு போன் போட்டு நடந்த இந்த அக்கப்போரை புட்டு புட்டு வைத்துவிட்டார். இது என்னடா புது வகை கேஸா இருக்குதே என பதறிய போலீசார் உடனே ஓடி வந்தனர்.
உருளைக் கிழங்குகள்
ஸ்டோரில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான வீடியோ காட்சிகளை போலீசார் போட்டுப் பார்த்தனர். அப்போது இளம் பெண், உருளைக் கிழங்குகள் வைக்கப்பட்ட இடத்திற்கு சென்றதும், அங்கே அந்த வேலையை முடித்துக் கொண்டு, எழுந்து நின்று அக்கம் பக்கம் பார்த்துவிட்டு, கிளம்பி செல்வதும் பதிவாகியிருந்தது.
சரணடைந்த பெண்
இதையடுத்து இந்த வீடியோ காட்சிகளை ஊடகங்களில் வெளியிட்டு அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர். குட்டு வெளிப்பட்டுப் போனதால் வேறு வழியின்றி, வெஸ்ட் மிப்பின் போரோ காவல் துறையில் சரணடைந்துள்ளார் கிரேஸ் ப்ரவுன். கடைக்குள் வந்ததும், சிறுநீர் கழித்துவிட்டு, அப்படியே வெளியேற மட்டுமே செய்துள்ளார் அந்த பெண் என்பதால், இவரின் நோக்கம் என்ன என்பது பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.
திருட்டு
நம்மூரிலெல்லாம் இதுபோன்ற பெரிய கடைகளில் நைசாக பொருட்களை திருடி மாட்டிக்கொள்வோரை பார்க்க முடியும். பிரபல கடைகள் முழுக்க சிசிடிவி கேமராக்களாக மாற இதுவும் ஒரு முக்கிய காரணமாகிவிட்டது.
பொருள் வீண்
அமெரிக்கா முன்னேறிய நாடுதான். அதற்காக இப்படியுமா வித்தியாசமாக ஒரு செயலை செய்து மாட்டிக்கொள்வார்கள் அங்குள்ள சிட்டிசன்கள்? ஆச்சரியம் அளித்தாலும் இதுபோன்ற மனநிலை உள்ள மக்கள் உணவுப் பொருளை வீணாக்குகிறோமே என்ற குறைந்தபட்ச குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருப்பது வேதனைதான்.