உலகளவில் 50 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பலி எண்ணிக்கை.. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவில் அதிகம்
வாஷிங்டன்: கொரோனா நோயால் உலக அளவில், 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
2020ம் ஆண்டு, ஏப்ரல் 2ம் தேதி நிலவரப்படி கொரோனா வைரஸ் COVID-19 காரணமாக, இதுவரை 981,428 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 50,255ஐ தாண்டியுள்ளது.
இதில் ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்றால், 2 லட்சத்து 6,372 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
லேசான அறிகுறிகளுடன், 692,496 (95%) பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 37,029 (5%) பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கையில், இத்தாலி, 13,915 நோயாளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 10,003 பேருடன் ஸ்பெயின் இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்காவில் 5,369 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ்- 4,032, ஈரான்- 3,160 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனோ.. ஸ்பெயினில் 10 ஆயிரத்தை தாண்டியது இறப்பு எண்ணிக்கை
உலகம் முழுக்க மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 986,279 என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மில்லியன் என்ற அளவுக்கு சென்றுள்ளது.