இரட்டை குழந்தை.. இறந்து பிறந்த ஒரு உயிர்.. உயிருக்கு போராடும் இன்னொரு பிஞ்சு.. ப்ளீஸ் உதவுங்கள்!
Recommended Video
சென்னை: குறை மாதத்தில் பிறந்த குழந்தையின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவியை எப்படியாவது செய்திடுங்கள்.
என் பெயர் கார்த்திகேயன், நானும் என் மனைவி தனலட்சுமியும் உங்களிடம் எங்கள் குழந்தை சிகிச்சைக்காக உதவி கேட்டு வந்து இருக்கிறோம். எங்களுக்கு 2019ம் வருடம் 7ம் மாதம் இரட்டை குழந்தை பிறந்தது. குழந்தை குறைமாதத்தில் பிறந்தது.
இதனால் இரண்டு குழந்தைகளில் ஒன்றை எங்களால் காப்பற்ற முடியவில்லை. நாங்கள் எங்களின் ஒரு குழந்தையை ஏற்கனவே இழந்துவிட்டோம். இன்னொரு குழந்தை இப்படி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளது.
நாங்கள் இந்த குழந்தையை எப்படியாவது காப்பாற்ற வேண்டும். எங்கள் குழந்தைக்கு NICU எனப்படும் குழந்தைகளுக்கான அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொள்ள உங்களின் உதவி தேவைப்படுகிறது. இதற்கு 4 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும்.
நீங்கள் எவ்வளவு வேகமாக உதவுகிறீர்களோ அவ்வளவு வேகமாக எங்கள் குழந்தையை காப்பாற்ற முடியும். அந்த குழந்தை உயிரை காக்க உடனடியாக மக்கள் பணம் கொடுத்தால்தான் சிகிச்சை மேற்கொள்ள முடியும்.
நீங்கள் குழந்தை உயிரை காக்க விரும்பினால், இந்த லிங்கை கிளிக் செய்து பணம் கொடுத்து உதவிடுங்கள். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ரூபாயும் கூட இந்த குழந்தை உயிரை காத்திடும்.
இந்த செய்தியை உங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள்!
RECOMMENDED STORIES