+2 முடித்ததும் கை நிறைய சம்பளம் பெற என்ன படிக்கலாம்? வாய்ப்புகளை திறந்துள்ள வேல்ஸ்
+2விற்கு பிறகு படிக்க வேண்டிய அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் என்ன? இதை எங்கு படிப்பது சிறப்பாக இருக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
சென்னை: +2விற்குப் பிறகு படிக்க வேண்டிய அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எவை? இதை எங்கு படிப்பது? இந்த வினாக்களுக்கு விடைக்கான வாருங்கள்.
மருந்தியல் மற்றும் பிசியோதெரபி
இந்தியா அதிக மக்கள் தொகை உள்ள நாடு. இந்த அதிக மக்கள் தொகை காரணமாக நோயாளிகள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. இந்தியாவில் தகவல்தொழில் நுட்பத்துறையின் ஏற்றம் இப்போதெல்லாம் இளைஞர்களுக்குகூட முதுகுவலி பிரச்சினைகளை ஏற்படுத்திவுள்ளது. . இங்குதான் பிசியோதெரபிஸ்ட்டின் பங்கு மிகவும் முக்கியமானது. நீங்கள் பிசியோதெரபிஸ்ட் ஆகவேண்டும் என்றால் முதலில் பிசியோதெரபி படிப்பைதேர்வு செய்யவேண்டும்.
அதேசமயம் நீங்கள் நன்றாக சம்பாதிக்க இந்தபடிப்பு உதவும் (ஒருவருக்கு அந்த குணப்படுத்தும் தொடுதல் மற்றும் நல்ல திறன்கள் இருந்தால் இன்னும் நல்லவருமானம் வரும்). நல்ல பிசியோதெரபிஸ்டுகள் எப்போதுமே அறுவை சிகிச்சைக்குப்பிறகு செய்யப்படவேண்டிய சிகிச்சை மற்றும் எலும்புகள் தொடர்பான நோய்களிலிருந்து மீள்வதுபோன்ற பணிகளுக்கு தேவைப்படுகிறார்கள். இன்னொருபக்கம் மருந்தியல் துறை மருந்துகளை உருவாக்குவது தொடர்பான படிப்பாகும். ஒருநோயில் இருந்து விடுபடுவதற்கு சரியான மருந்துகள் மற்றும் மருத்துவம் எவ்வளவு முக்கியம் என்பதையும் நாங்கள் அறிவோம்.
விஸ்டாஸ் (VISTAS) என்பது யுஜிசியால் (யுஜிசி) அங்கீகரிக்கப்பட்ட ஒரு பல்கலைக்கழகமாகும், இது மருந்து அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் படிப்புகளை வழங்கும் பல்கலைக்கழகமாகும், இது 1992 ஆம் ஆண்டில் வேல்ஸ் குழுவின் முதல் துறையாக நிறுவப்பட்டது. இங்கும் இந்தப் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கல்வியல் (எஜிகேசன்)
தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஆசிரியர்கள் முக்கியபங்கு வகிக்கின்றனர். அவர்கள் மாணவர்களுக்கு கற்பித்துப் பயிற்சியும் அளிக்கிறார்கள். இளம் மனதை வடிவமைப்பதில் பள்ளி ஆசிரியர்களின் பங்கு நம் அனைவருக்கும் நன்கு தெரியும். அதேபோல் நாளைய எதிர்காலத்தை வடிவைமைப்பதில் வேல்ஸ் பேராசிரியர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கது. ஒரு நல்ல ஆசிரியர் எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் விலைமதிப்பற்ற சொத்து என்பதை அறிவோம்.
இந்தியாவில் கல்வித்துறை வளர்ந்து வருகிறது. அனைத்து பெரிய நகரங்கள் மற்றும் சிறுநகரங்களின் மூலையிலும் நிறைய புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி தகுதிவாய்ந்த ஆசிரியர்களுக்கான தேவை எல்லா நேரத்திலும் அதிகமாக இருக்கும்.
ஒரு தகுதிவாய்ந்த ஆசிரியர் என்பவர் ஆசிரியராக சிறப்பாக செயல்பட கூடுதல் பயிற்சி பெற்ற ஒருவராக இருக்கவேண்டும். பி.எட் மற்றும் எம்.எட் போன்றபடிப்புகளைத் படிப்பது ஒருதகுதிவாய்ந்த ஆசிரியராக மாற உதவுகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு முடித்து, ஆசிரியராகப் பணியில் சேரவிரும்பும் மாணவர்களுக்கு இப்போது ஒருங்கிணைந்த பி.எஸ்சி.பி.எட் அல்லது பி.ஏ.பி.எட் படிப்புகள் உள்ளன. புதுதில்லியின் என்.சி.டி.இ.யால் அங்கீகரிக்கப்பட்டு, சென்னைப் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகம் இந்தப் படிப்புகளை சிறப்பாக வழங்குகிறது.
பிஸ்னஸ் அட்மினிஸ்ட்ரேஷன்:
வணிக மற்றும் மேலாண்மை சார்ந்த படிப்புகளைத் படிப்பவர்கள் மற்றும் அதுதொடர்புடைய துறைகளில் பணிபுரிபவர்கள் மேலாண்மை வல்லுநர்கள் (Management professionals) என்று அழைக்கப்படுகிறார்கள். சில நன்கு அறியப்பட்ட மேலாண்மை மற்றும் வணிக படிப்புகள் - பிபிஏ மற்றும் எம்பிஏ படிப்புகள்.
ஒரு மேலாண்மை நிபுணர் எவ்வளவு சிறப்பாக சம்பாதிப்பார் என்பது அவரின் நிபுணத்துவம் பெற்ற துறை, அவர் எடுத்தத்துறை எம்பிஏ ஆகும் இந்தப் பட்டம் மிகவும் மதிப்புமிக்கது, ஒரு சில மேலாண்மை படிப்புகள் மிக உயர்ந்த சம்பளத்தை உங்களுக்குப் பெற்றுத்தருவதில் அவர்படித்த கல்வி நிறுவனமும் பெரும் பங்களிப்பை செய்கிறது. . .
தனியார் கல்லூரிகளின் வரிசையில் வேல்ஸ் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ் ஒரு புகழ் பெற்ற மேலாண்மை நிறுவனமாகும், இது லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை செயின், லாஜிஸ்டிக்ஸ் & ஷிப்பிங் மற்றும் பிசினஸ் அனலிட்டிக்ஸ் (ஐபிஎம்உடன்இணைந்து) ஆகியவற்றில் நிபுணத்துவம் அளிக்கிறது. இவை அனைத்தும் என்.பி.ஏ. (National Board of Accreditation) மூலம் அனுமதிக்கபட்டவை. இந்தப் படிப்புகள் AICTE பகுதிகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மனிதவள மேலாண்மை, ஊடக மேலாண்மை, சர்வதேச வணிகம், மருத்துவமனை மற்றும் சுகாதார மேலாண்மை, நிதி மற்றும் வரிவிதிப்பு ஆகியவை அதிக வருமானம் தரகூடிய துறைகளாகும். +2 படித்த மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த ஐந்தாண்டு எம்பிஏ படிப்பும் உள்ளது.
விமான போக்குவரத்து (ஏவியேஷன்)
அதிக ஊதியம் பெறும் பல வேலைகள் விமானத்ததுறையில் உள்ளன! ஒரு கமர்ஷியல் பைலட் மிக அதிக அளவில் ஊதியம் பெறமுடியும். இது நாம் குழந்தைகளாக இருந்தபோது கனவுகாணும் ஒருவேலையாகும். பறக்கும் எண்ணமே இந்த வேலையை ஒருகனவு வேலையாக மாற்றுகிறது. மேலும் இது வருமான ரீதியாகவும் சிறப்பான துறையாகும்.
Best marine college in Chennai
புதிய தனியார் விமான நிறுவனங்கள் நிறைய வந்துள்ளதால் விமானத்துறையில் எதிர்காலம் நன்றாக இருக்கிறது. வணிக விமானிகளுக்கான தேவை உயர்ந்துள்ளது. ஆனால், வணிக விமானியாக மாறுவதற்கான செயல்முறை சற்றுகடினமானது, விலை உயர்ந்தது, குறிப்பாக விமானப் பயிற்சி. அதேசமயம் திறமையான மாணவர்களுக்கு, அதிமாக உதவித்தொகை கிடைக்கிறது, இது படிப்பிற்கான நிதிச்சுமையைக் குறைக்கிறது. இதற்காக ஏரோநாட்டிகல் சயின்ஸில் பி.எஸ்சி மற்றும் விமான பராமரிப்பில் (Aircraft Maintenance) பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை வேல்ஸ் வழங்குகிறது.
இன்னும் சில அதிக ஊதியம் பெறும் விமானத்துறை தொடர்பான வேலைகள்: ஏர்ஹோஸ்டஸ் / ஸ்டீவர்ட், விமானநிலைய மேலாளர், போன்ற வேலைகளாகும்.
சட்டம்:
திறமையான மற்றும் அனுபவம் மிக்க வழக்கறிஞர்களுக்கு எப்போதும் தேவை அதிகமாக இருக்கும். இவர் சமுதாயத்தில் நன்கு மதிக்கப்படுகிறார்கள் மற்றும் அதேபோல் வருமானமும் அதிகம் கிடைக்கும். B.A, L.L.B./B.Com, L.L.B. போன்ற ஒருங்கிணைந்த சட்டப்படிப்புகளை அல்லது எல்.எல்.பி. (L.L.B.) முடித்தபிறகு ஒருவர் சட்ட நிறுவனங்களுக்காக வேலை செய்யத் தொடங்கலாம் அல்லது தனியார் பயிற்சியைத் தொடங்கலாம்!
இந்தத் துறையில் செழிக்க, ஒருவருக்கு நல்ல பகுத்தறிவு திறன், சொற்பொழிவு திறன், மனஉறுதி, விசாரணை திறன் மற்றும் நம்பிக்கை இருக்க வேண்டும். இலாபகரமான துறைகளில் நிபுணத்துவம் பெறுவது ஒருவருக்கு நிதிரீதியாக பலனளிக்கும் வாழ்க்கையைக் கொடுக்கும். குற்றவியல் சட்டம், கார்ப்பரேட் சட்டம், தொழிலாளர் சட்டம் போன்ற துறைகள் மிகவும் பலனளிக்கும்.
பார்கவுன்சில் ஆஃப் இந்தியா (பி.சி.ஐ) ஆல் அங்கீகரிக்கப்பட்டப் படிப்புகளை வேல்ஸ் ஸ்கூல் ஆஃப் லா, வழங்குகிறது. வருமானம் பெரும் துறைகள் பல உள்ளன. ஆனால் வாழ்க்கையில் வெற்றிபெற ஒருவர் தாங்கள் விரும்புவதைப் பின்பற்ற வேண்டும், படிக்கவேண்டும்.அதற்கு ஏற்ற கல்வி நிறுவனம் வேல்ஸ் கல்விக்குழுமம் ஆகும்.
RECOMMENDED STORIES