Papanasam Dam Water Level Today | பாபநாசம் அணை நீர்மட்டம் இன்று
பாபநாசம் அணை வரலாறு:
பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1942 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த பாபநாசம் அணை. இவ்வணை 'தாமிரபரணி ஆறு' அணை என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு சொல்லப்போனால் இரண்டு அணைகள் உள்ளன. மேல் அணைக்கு கரையார் அணை என்றும் கீழ் அணைக்கு பாபநாசம் அணை என்றும் சொல்லுவர்.
எங்கு உள்ளது பாபநாசம் அணை?
தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் இருக்கிறது இந்த பாபநாசம் அணை. இவ்வணை திருநெல்வேலி மாவட்டம் மற்றும் சுற்றுபுற மக்களுக்கு உதவியாய் இருக்கும் ஒரு முக்கிய அணையாகும். ஏனெனில் இந்த அணை மூலமாக திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன . மேலும் இந்த பாபநாசம் அணையின் மூலம் கிடைக்கும் தண்ணீர் , திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி ஆகிய முக்கிய ஊர் மக்களுக்கு ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது.
எந்த ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது பாபநாசம் அணை?
பாபநாசம் அணை (Papanasam Dam) என்பது தமிழ்நாட்டில் உள்ள திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பாயும் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணைக்கட்டு ஆகும். இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன.
பாபநாசம் அணை முழு கொள்ளளவு விவரம்:
பாபநாசம் அணையில் 143 அடி வரை நீரைத் தேக்க இயலும். இவ்வணையின் முழு கொள்ளளவு 5,500 மில்லியன் கன அடி.
பாபநாசம் அணை வானிலை:
ரம்மியமான இயற்கை சூழலின் மத்தியில் இந்த பாபநாசம் அணை அமைந்துள்ளதால் இங்கு இதமான குளிர் காற்று எப்போதும் வீசும். சில சமயங்களில் குறைந்தளவு தண்ணீர் இருந்தாலும் கூட குளிர்ச்சியான காற்று வீசுவதால் சுற்றுலா பயணிகள் வருகை எப்பொழுதும் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும்.
பாபநாசம் அணை - அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்:
சிவன் கோயில், சொரிமுத்து அய்யனார், அகத்தியர் அருவி, களக்காடு முண்டன்துறை புலிகள் சரணாலயம், சேர்வலாறு அணை, காரையார் அணை, மணிமுத்தாறு அணை, குற்றாலம், திருநெல்வேலி, கடனாநதி அணை ஆகிய சுற்றுலா தளங்கள் பாபநாசம் அணைக்கு அருகே அமைத்துள்ளது.
பாபநாசம் அணை - பார்வையிடும் நேரம்:
பாபநாசம் அணையை பார்வையிட சுற்றுலாப்பயணிகளுக்கு அனைத்து வார நாட்களிலும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு நுழைவு கட்டணமாக எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது. வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதியும் இங்கு செய்யப்பட்டுள்ளது.