By Chandru
| Published: Thursday, June 24, 2021, 13:42 [IST]
1/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html
சென்னை புறநகர் ரயில் சேவையில் அத்தியாவசிய பணியாளர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்ட நிலையில் இனி, அனைவரும் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.லட்சக்கணக்கானவர்கள் தங்களுடைய பணிகளுக்காக இந்த சேவையைத்தான் பயன்படுத்தி வந்தார்கள்.
2/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html#photos-1
கொரோனா காரணமாக கடந்த பல வாரங்களாக புறநகர் ரயில்களில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக பணியாளர்கள் மட்டுமே இந்த புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம் என்ற நிலை இருந்தது.
3/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html#photos-2
தற்போது கொரோனா பரவல் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையானது, நாளை முதல் மீண்டும் தன்னுடைய முழு இயக்கத்தை தொடங்குகிறது. ஆனால், அதிலும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
4/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html#photos-3
ஆண்கள், பீக் ஹவர் நேரத்தில் இந்த ரயில்களில் பயணிக்க அனுமதியில்லை. அதாவது, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணிக்குள் அவர்கள் பயணிக்கலாமே தவிர பிற நேரங்களில் பயணிக்க கூடாது.
5/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html#photos-4
பெண்களைப் பொறுத்தளவில் எப்போது வேண்டுமானாலும் பயணிக்கலாம். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை அவர்கள் அழைத்துச் செல்ல அனுமதி உண்டு. காலை முதல் இரவு வரை எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்தலாம்.
6/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html#photos-5
அதேநேரம், அரசு ஊழியர்கள் புறநகர் ரயில் சேவையை பயன்படுத்த காலக்கெடு எதுவும் கிடையாது. எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மத்திய அரசு பணியாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் ஆகியோருக்கும் இந்த சலுகை உண்டு. அவர்களும், எத்தனை முறை வேண்டுமானாலும் பயணிக்கலாம்.
7/7
சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. நாளை முதல் மின்சார ரயிலில் எல்லோரும் போகலாம்! - Oneindia Tamil
/photos/chennai-people-can-use-electric-trains-from-tomorrow-oi63366.html#photos-6
தொலைதூர ரயில்களில் பயணித்து சென்னை வருவோர், அல்லது சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கு தொலைதூர ரயில்களில் செல்வோர் அந்த ரயில் டிக்கெட்டை காண்பித்து பயணம் செய்யலாம் ஆனால்
ஒருமுறை மட்டும் தான் இந்த ரயில் டிக்கெட்டை காட்டி குறிப்பிட்ட நாளில் பயணம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும்.