Home / Photos
அவரை கைது செய்யுங்கள்...! இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம்...! ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் திரளும் உலகத் தமிழர்கள்..!
By Chandru
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உலகத் தமிழர்கள் திரண்டு வருகின்றனர்.
1/16
Share
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உலகத் தமிழர்கள் திரண்டு வருகின்றனர்.
2/16
Share
இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை பிரிட்டன் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.
3/16
Share
ஐ.நா.வின் 26-வது பருவநிலை மாற்றம் தொடர்பான மாநாடு ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வருகிறது.
4/16
Share
இம்மாநாட்டில் பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
5/16
Share
பிரிட்டன் வந்துள்ள கோத்தபாய ராஜபக்சே 2009-ம் ஆண்டு இலங்கையில் தமிழினப் படுகொலை நிகழ்த்திய போர்க்குற்றங்களுக்காக கைது செய்ய வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் கோரிக்கை ஆகும்.
6/16
Share
இந்நிலையில் இதனை வலியுறுத்தி கிளாஸ்கோ நகரில் கோத்தபாய ராஜபக்சே எதிராக போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
7/16
Share
மேலும் இப்போராட்டத்துக்கு தமிழகத்தின் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
8/16
Share
மேலும் இப்போராட்டத்தில் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
9/16
Share
இந்நிலையில் கிளாஸ்கோ போராட்டத்தில் பங்கேற்க தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் பல்வேறு நாடுகளில் இருந்து குவிந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications