யார் இந்த கிருஸ்துமஸ் தாத்தா?
கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தின் முக்கிய கலகலப்புகளில் ஒன்று கிருஸ்துமஸ் தாத்தா. சின்னக் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி, அவர்களைசந்தோஷப்படுத்துவதுதான் தாத்தாவின் முக்கிய வேலை என்ற கருத்து பெரும்பாலும் உள்ளது.
ஆனால் உண்மையில் ஏழைகள், இல்லாதவர்களுக்கு உதவும் பொருட்டே கிருஸ்துமஸ் தாத்தா அவதரித்தார்.
துருக்கியில் புனித நிக்கோலஸ் என்ற பாதிரியார் இருந்தார். இவர்தான் முதலாவது கிருஸ்துமஸ் தாத்தா ஆவார். துருக்கியில் 3 பெண்களைக் கொண்ட ஒரு குடும்பம்மிகுந்த வறுமை நிலையில் அவதிப்பட்டு வந்தததைப் பார்த்த நிக்கோலஸ் வேதனைப்பட்டார்.
அந்தப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க முடியாமல் தந்தை வறுமையில் வாடியதை உணர்ந்த அவர் அவர்களுக்கு உதவ முடிவு செய்தார். கிருஸ்துமஸ் தாத்தாகோலம் பூண்டார்.
அவர்களது வீட்டு புகை போக்கியின் வழியாக தங்க நாணயங்களை அவர் போட்டார். அதைக் கண்ட அவர்கள் இறைவன் தான் தங்களுக்கு உதவியதாகமகிழ்ச்சியடைந்தனர். நான் தான் உதவி செய்தேன் என்பதை அவர் கடைசி வரை சொல்லவில்லை. ஏழைக் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தருவது தனதுகடமை என நினைத்தார்.
அந்த மகிழ்ச்சி இன்று வரை கிருஸ்துமஸ் தாத்தா மூலம் உலகெங்கும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.