ஹாய் சூரியன்!
பொங்கல் மட்டுமல்ல, தமிழ் புத்தாண்டும் கூட ஒரு வகையில் சூரியனுக்கு எடுக்கப்படும் விழா தான்.
சூரியனின் சுழற்சியின் அடிப்படையில் தான் புத்தாண்டே கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.
கிரகங்கள் அனைத்திற்கும் தலைமை கிரகம் சூரியன். எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றி வந்து கொண்டிருக்கிறன். தமிழ் நாட்டில் மட்டும்தான்சூரியனுக்கென்று தனி விழாக்கள் எடுக்கப்படுகின்றன.
ஜாதகம் கணிப்பது சூரியனின் உதய, அஸ்தமன அடிப்படையிலேயே கணக்கிடப்படுகிறது.
தமிழகத்தின் தமிழ் புத்தாண்டு சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் நாளன்று கொண்டடாப்படுகிறது.
மொத்தம் 12 ராசிகள் உள்ளன. அவை மேஷராசியில் தொடங்கி மீன ராசியில் முடியும். கிரகங்களின் சுழற்சி கணக்கின்படி சூரியன் ஒரு ராசியிலிருந்து மற்றொருராசிக்கு செல்ல 1 மாத காலம் எடுத்துக் கொள்கிறார்.
அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு செல்வது சங்கரமணம் என அழைக்கப்படுகிறது. மாத சங்கரமணம்என்பது மாதப் பிறப்பாகும். சூரியன் ராசிகளில் முதல் ராசியான மேஷ ராசியில்பிரவேசிப்பது வருட சங்கரமணம். இது வருடப்பிறப்பாக, புத்தாண்டாககொண்டாடப்படுகிறது.
தமிழர்கள் சூரியனின் சுழற்சி அடிப்படையிலேயே நல்ல நாள், நேரங்கள், முகூர்த்தங்கள்ஆகிய அனைத்தையம் கணக்கிடுவது வழக்கமாக உள்ளது.
புத்தாண்டு தினத்தன்று காலை பஞ்சாங்கத்திற்கு மஞ்சள், குங்குமம் பூசி பூஜையில்வைக்கப்பார்கள். மாலை பூஜையிலிருந்து எடுத்து பஞ்சாங்கத்தை படிக்கும் வழக்கம்பலநூறு வருடங்களாக இருந்து வருகிறது.
பஞ்சாஙகத்தின் உதவி கொண்டே நல்ல நாள், நேரம், திருமண பொருத்தங்கள் போன்றவைகூறப்படுகின்றன. இதன் காரணமாக பஞ்சாங்கம் தமிழர்களுக்கு மிக இன்றியமையாததாகஉள்ளது.
புதுவருட நாளன்று வீடுகளில் மாக்கோலம் போடப்படும். மாவிலைத் தோரணங்கள்கட்டப்பட்டு வீடுகள் அலங்கரிக்கப்படும்.
புத்தாண்டு நல்லது நடந்தால் வருடம் முழுவதும் நல்லது நடக்கும் என கருதப்படுவதால்,அன்று பலரும் கோவில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவார்கள். கோவில்களிலும்புது வருடத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
வரவிருக்கும் விஷு ஆண்டில் எல்லாம் நல்லதாக நடக்க இறைவனை வழிபடுவோம்.
நாட்கள் என்னும் பூக்கள் சிந்தும் புத்தாண்டில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!