உங்களுக்கு பவுர்ணமி மாதிரி பொண்ணு ஓகேவா?
சென்னை: சன் டிவியின் பவுர்ணமி சீரியலில் முதல் தாரத்துக்கு பிறந்த பவுர்ணமியை முகம் சுளித்து அருவெறுக்கும் அப்பா.
ரெண்டம் தாரத்துக்கு பிறந்த பவானியை தேவைதையாக கொண்டாடும் ஆசை அப்பா. .பவுர்ணமி பாட்டியின் அன்பிலும், த்தியின் அரவணைப்பிலும் மட்டுமே வளர்கிறாள்
பெத்த பெண்ணிடம் இப்படி நடந்துகொள்ளும் அப்பா இருந்தும் அந்த குடும்பம் அமைதியாக சந்தோஷமாக இருக்க காரணம் என்ன, பவுர்ணமியின் பொறுமையான குணம்தான்.
ஸ்ரீராமருக்கு இவ்ளோ கோபம் வருமா?
ஓவர் பாசம் பவுர்ணமி
அப்பா மீது ஓவர் பாசம் வைத்துள்ள பவுர்ணமி, அப்பா தன்னை மானம் போகும்படி திட்டினாலும், கண்டாலே வெறுத்தாலும் தனது நல்லதுக்குத்தான்னு கண்மூடித் தனமா நம்பிகிட்டு இருக்கா.
பவானிக்கு காதலனை
பவுர்ணமியில் காதலனை அவன் பவுர்ணமியைத்தான் காதலிக்கிறான் என்று தெரியாமலே, பவானியை காதலிப்பதாக அப்பா சக்ரவர்த்தி நினைச்சுக்கறார். ஒரு நாள் பவுர்ணமியும் , ராம்கி அதாவது பவானியின் காதலனுடன் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்த பவுர்ணமியின் அப்பா,பவானியின் வாழ்க்கையையும் பவுர்ணமி கெடுத்துருவான்னு உடனடியா பவானிக்கும் ராம்கிக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைக்க முடிவு செய்யறார்.
வேண்டாம் பவுர்ணமி
சக்ரவர்த்தி தனது இரண்டாவது மனைவி வாசுகியிடம் போயி,பவானிக்கு நடக்கும் நிச்சயதார்த்தம் போது பவுர்ணமி வீட்டில இருக்கக் கூடாது.அதுக்கு நீதான் வழி செய்யணும்னு சொல்லிட்டு போறார்.
பவுர்ணமியிடம் சித்தி
சித்தி பவுர்ணமியிடம் பவானிக்கு நடக்க இருக்கும் நிச்சயதார்த்தத்தை சொன்னதும் பவுர்ணமி சந்தோஷம் அடையறா. ஆனா ,அம்மாவின் முகத்தைப் பார்த்துட்டு, அதுக்கு எதுக்கும்மா கண் கலைங்கறீங்க..என்ன சொல்லணுமோ அதை சொல்லிடுங்கன்னு கேட்கறா பவுர்ணமி.
நீ எங்காவது கிளம்பிரு
நீ பவானி நிச்சயதார்த்தம் நடக்கறப்போ,இந்கிருக்க வேணாம் பவுர்ணமி.எங்காவது வெளியில போயிட்டுன்னு சொல்றாங்க அம்மா. உள்ளுக்குள்ள உடைஞ்சு போனே பவுர்ணமி..சரிம்மா..நான் முதல் நாளே கிளம்பி என் ஃபிரண்ட் வீட்டுக்கு போயிடறேன்னு சிரிச்சுகிட்டே சொன்னபவுர்ணமி அப்பா எது சொன்னாலும் என் நல்லதுக்கு தான்மா இருக்கும்னு சொல்றா.
பவுர்ணமி மாதிரி பொண்ணு ஒரு வீட்டில் இருந்தால் நல்லதா கெட்டதா?