For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Roja serial: அர்ஜுன் மாதிரி புருஷனும் அன்னபூரணி மாதிரி பாட்டியும்!

Google Oneindia Tamil News

சென்னை: சன் டிவியின் ரோஜா சீரியலில் ஒரு அனாதை பெண்ணான ரோஜாவுக்கு ஒரே நேரத்தில் இனிப்பும் கசப்புமாய் ஒரு வாழக்கை.எந்த அளவுக்கு புருஷன் சர்க்கரையோ.அந்த அளவுக்கு அவனின் பாட்டி வேப்பிலை.

அன்னபூரணி பாட்டி எப்போது பார்த்தாலும் குலம் கோத்திரம் தெரியாதவள் என்று ரோஜாவை சீண்டி குடும்பத்தில் எதிலும் ஒட்ட விடாமல் செய்யறாங்க. அர்ஜுன் அம்மா அதாவது ரோஜாவின் மாமியார் கூட ரோஜாவை ஒன்றும் சொல்லாத போதிலும் இந்த பாட்டிதான்.

பாட்டிக்கு குடும்பமே மரியாதை தந்து அவரை நன்றாக பார்த்துக்கறாங்க. ஆனால், பார்த்துக்க வேண்டிய மகள் யசோதா, மருமகன், பேத்தி என்று சொல்லி வந்து ஒட்டிக்கொண்டு இருக்கும் அணு மூவரும் பாட்டிக்கு துரோகம் செய்கிறார்கள்.

பாவம் இல்லையா?

பாவம் இல்லையா?

ரோஜா அனாதை ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள். ஆஸ்ரமம் கேஸ் விஷயமாக அன்னபூரணி அம்மாவின் பேரன் அர்ஜுன் வக்கீலை சந்திக்க, இவன் தனக்கு வீட்டில் அணுவுடன் நடக்க இருக்கும் கல்யாணத்தில் இருந்து தப்பிக்க, உன் கேஸை நான் முடிச்சு தரேன்.எனக்கு மனைவியா ஒரு வருஷத்துக்கு நடின்னு ஒப்பந்தம் போட்டுக்கறான். அனால்,இருவருக்குள்ளும்காலப்போக்கிலக்காதலேற்பட்டு,நிஜமாவே ஒருத்தரை ஒருத்தர் ரொம்ப விரும்பறாங்க.

அணுவுடன் ஆஸ்ரமத்தில்

அணுவுடன் ஆஸ்ரமத்தில்

அணுவுடன் ஆஸ்ரமத்தில் வளர்ந்தவள்தான் ரோஜாவும்..ஆஸ்ரமத்துக்கு போலீஸ் சீல் வச்ச நிலையில், எங்கு போவது என்று எல்லாரும் தவிச்சுக்கிட்டு இருக்க, ரோஜாவின் சிறு வயது ஆதாரங்களைத் திருடி வந்து அன்னபூரணியின் பெரிய மகள் வயிற்று பேத்திதான் தான் என்று பொய் சொல்லி அடைக்கலம் ஆகிடறா. ரோஜா இடத்தில் தான் இருப்பது அனுவுக்கு மட்டுமே தெரியும்.ரோஜாவுக்கே தெரியாது.

உட்கார்ந்தால் குத்தம்

உட்கார்ந்தால் குத்தம்

ரோஜா தன்னுடன் ஆஸ்ரமத்தில் வளர்ந்த ஒரு அநாதை என்று அணு பாட்டிக்கு சொல்லிவிட. குலம் கோத்திரம் தெரியாத ஒருத்தியை பேரன் வீட்டுக்கு மருமகளா கொண்டு வந்துட்டான்.இவளை எப்படியாவது வீட்டை விட்டு துரத்திடணும்னு நினைச்சுக்கறாங்க. அனாதை பெண் என்பதால், தங்களது பரம்பரைக்கு இவர் ஏற்றவள் அல்ல என்பதே பாட்டியின் எண்ணம்.

புடவை கல்யாணம்

புடவை கல்யாணம்

கல்யாணப் புடவை எடுக்கும்போது ரோஜா புடவையைத் தொட்டால் குத்தம். பரம்பரை பரம்பரையான வைர அட்டிகையை ரோஜா தொட்டால் குத்தம், சீ என்ன குலமோ, கோத்திரமோ..வீட்டுக்கு சொந்தம் இல்லாதவங்க இதை தொடக் கூடாதுன்னு சொல்ல கூடாதா மருமகளேன்னு கத்தறாங்க.

என்னதான் அனாதப் பெண்ணானாலும் உங்க பேரன் அர்ஜுன் தாலியும் கட்டியாச்சு.இதுக்கு மேல என்னம்மா வேணும்னு வேலைக்காரி சுமதி கேட்டாலும் இதற்கு பதில் சொல்வார் யார்?

English summary
An orphaned roja in Sun TV's roja serial has a sweet and bitter taste at the same time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X