For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பார்வதிக்கு ஒரு டெஸ்ட்.. ஆதி ரூமுக்கு ஏன்...?

Google Oneindia Tamil News

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி அம்மா பெரிய தொழிலதிபர். இதில் சத்தமில்லாமல் ஷேர் ஹோல்டராக இருப்பவங்க பார்வதியும், அவங்க அப்பாவும்.

ஆனா, பார்வதி அகிலாண்டேஸ்வரி அம்மா வீட்டுல சமையல்காரி .அப்பா கார் டிரைவர். அகிலாண்டேஸ்வரி அம்மாவின் மகன் ஆதி, பார்வதியை காதலிச்சு யாருக்கும் தெரியாம கல்யாணமும் செய்துகிட்டு இருக்கார்.

ஆனா, அகிலாண்டேஸ்வரி அம்மா தனது உறவுப் பெண்ணான ருத்ராவை ஆதிக்கு கல்யாணம் செய்து வைக்கும் முடிவில் இருக்காங்க.

ஆய்வுக்கு சென்ற இடத்தில் ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ! ஆய்வுக்கு சென்ற இடத்தில் ரூம் போட்டு இளம் பெண்ணை கட்டிப்பிடித்து ஆட்டம் போட்ட எம்எல்ஏ!

நேத்து ராத்திரி

நேத்து ராத்திரி

நேத்து ராத்திரி ஆதி ரூமுக்கு பார்வதி போயிட்டு வந்ததை குடும்பத்திலிருக்கும் ருத்ரா மற்றவர்கள் மூலமாக அகிலாண்டேஸ்வரி அம்மாவும் பார்த்துடறாங்க. ஆனா,ஆதி ரூமுக்குள்ள பார்வதி போனதுக்கு அவ சொன்ன காரணத்தை அகிலா அம்மா நம்பலை.

டெஸ்ட் பார்வதிக்கு

டெஸ்ட் பார்வதிக்கு

பார்வதி ஆதி ரூமுக்கு ராத்திரியில் எதுக்கு போயிருக்கணும்னு எனக்கு சந்தேகமா இருக்குதுங்கன்னு கணவரிடம் சொல்றாங்க அகிலா அம்மா. அவதான் உண்மையான காரணத்தை சொன்னாளே அகிலான்னு சொல்லியும் இல்லைங்க எனக்கு நம்பிக்கை வரலை. அதனால அவளுக்கு ஒரு டெஸ்ட் வைக்க போறேன்னு சொல்றாங்க.

டெஸ்ட்டா எப்படி?

டெஸ்ட்டா எப்படி?

கணவர் அச்சச்சோ...என்ன டெஸ்ட் வைக்கப்போறா தெரியலையேன்னு மனசுல நினைச்சுகிட்டு, என்ன டெஸ்ட் அகிலான்னு கேட்கறார். பார்க்கத்தானே போறீங்க...இருங்கன்னு சொல்லிட்டு, ஒரு வேலைக்காரியை கூப்பிடறாங்க.

புதினா டீ

புதினா டீ

அம்மா மனசளவில் ரொம்பக் குழம்பி போயிருக்காங்க...அவங்களுக்கு உன் கையால போடற புதினா டீ வேணுமாம்னு போட்டு எடுத்துட்டு வர சொல்லு. அதே மாதிரி புதினா டீ ஆதியும் கேட்டார்னு சொல்லி எடுத்துட்டு வர சொல்லுன்னு சொல்லி அனுப்பறாங்க.

புதினா டீ ரெண்டு

புதினா டீ ரெண்டு

ரெண்டு புதினா டீ போட்டு எடுத்துக்கிட்டு பார்வதி மாடி ஏறி வர... அகிலா அம்மா அவங்க ரூமுக்கு வெளியில் வந்து பார்க்கறாங்க. மாடி ஏறி வந்த பார்வதி, முதலில் யார் ரூமுக்கு போவது என்று சிறிது நேரம் நின்றுவிட்டு, ஆதி ரூம் நோக்கி போறா...

பார்த்துகிட்டு நிக்கறாங்க அகிலாண்டேஸ்வரி அம்மா...என்ன நடக்கப் போகுதுன்னு பார்த்துகிட்டு நிக்கறாங்க.

ஆதியிடம் பார்வதி

ஆதியிடம் பார்வதி

ஆதி ரூமுக்கு பார்வதி போறதை பார்த்துட்டு அகிலாண்டேஸ்வரி அம்மா யோசனையில் ரூமுக்கு போயிடறாங்க. கடைசியில் ஆதி புதினா டீ எடுத்துட்டு வர்றான்.நான் பார்வதிக்கிட்டேதானே கேட்டேன்..நீ கொண்டு வந்திருக்கேன்னு அம்மா கேட்க... நீங்க குழப்பமா மனசு சரியில்லாம இருக்கீங்கன்னு பார்வதி சொன்னாம்மா...

பாஸ் பரஸ்!

பாஸ் பரஸ்!

அதனால புதினா டீயை அம்மாகிட்ட நீங்க குடுங்க அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலா இருக்கும்னு சொன்னம்மான்னு ஆதி சொல்றான். பார்வதிக்கு எஜமான விசுவாசம் இருக்குங்கன்னு சொல்றாங்க அகிலாம்மா.ஆக மொத்தம் டெஸ்ட்டுல பார்வதி பாஸ் பரஸ்!

English summary
Zee Tamil TV's sembaruthi serial Akilandeswari is a businessman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X