Sembaruthi Serial: நீயும் நானும்.. வேற ஒருத்தர் பக்கத்துல.. நல்ல வேளை தப்பிச்சோம்!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் அம்மாவுக்கு தெரியாமல் பார்வதியை கல்யாணம் செய்துகிட்ட ஆதி, அம்மா ஏற்பாடு செய்த கல்யாணத்தை பத்தி கவலை பட்டுக்கிட்டு இருக்கும் பார்வதிக்கிட்டே இப்படி சொல்றான்.
அதாவது நீயும் நானும் வேற ஒருத்தர் பக்கத்துல நிக்க வேண்டி இருக்குமோன்னு கவலைப்பட்டுகிட்டு இருந்தேன். அப்படி எதுவும் நடக்காது பார்வதி.. நீ கவலைப்படாதேன்னு சொல்றான்.
அகிலாண்டேஸ்வரி ஆதிக்கு மித்ராவையும், பார்வதிக்கு வேர்ற மாப்பிளையும் பார்த்து கல்யாண ஏற்பாடு செய்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு இருக்காங்க. இந்த கவலையில்தான் பார்வதி உம்முன்னு இருக்கா.
நந்தினி பார்வதி
செம்பருத்தி சீரியலில் அகிலாண்டேஸ்வரி ஒரு மிடுக்குடன் இருக்கிறார் என்றால், பார்வதியும், நந்தினியும் பார்க்க அழகாக இருக்கிறார்கள். இது தவிர ஆதியாக நடிக்கும் கார்த்திக் சீரியலுக்கு பிளஸ். நிறைய பெண்களுக்கு இவரை பிடிக்கிறது. அத்துடன் இளம் பெண்கள் இவரது போட்டோவை தங்களது மொபைலில் வைத்து அழகு பார்க்கும் அளவுக்கு கார்த்திக்கை விரும்புகிறார்கள்.
kalyana veedu serial: டூ மச் எமோஷன்ஸ்.. பாவம் கோபி அம்மா சிவகாமி
பார்வதி ஆதி
ஆதியும், பார்வதியும் வீட்டுக்கு தெரியாமல் கல்யாணம் செய்துக்கொண்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இதை அம்மா அகிலாண்டேஸ்வரியிடம் சொல்லத்தான் ஆதி நல்ல நேரம் பார்த்து வருகிறான்.இந்த காட்சியை காணுவதற்கு என்றுதான் செம்பருத்தி சீரியலை விரும்பிப் பார்க்கும் அனைவரும் சீரியலை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இதை உணர்ந்த சீரியல் குழுவும், அதற்காக இழுவையை எவ்வளவு நீட்டிக்க முடியுமோ அவ்வளவு நீட்டித்து வருகிறது.
இருவர் ரொமான்ஸ்
ஆதி பார்வதியின் ரொமான்ஸ் காட்சிகளும் பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும், அனைவருக்கும் இதை பார்ப்பதில்தான் நிறைந்த சுவாரஸ்யம் இருக்கிறது. இருவரும் பேசுவார்கள், ஆதி பார்வதிக்கு ஆறுதல் சொல்வான். பார்வதியின் கவலை பறந்துவிடும். இவள் அவனை அனைத்துக் கொள்வாள். அதோடு இருவரையும் நடக்க வைத்து ஒரு டூயட் போட்டுவிடுவார்கள்.
போகாதே நீயிருந்தால்
அவள் ஒருமுறை இப்படித்தான் ஆதியை கட்டிப்பிடிக்க வருகிறாள். அவன் வழக்கம்போல நின்று கொண்டு இருக்காமல் தள்ளிப் போகிறான், அவள் அவன் அருகில் வந்து வந்து ஏமாந்து போகிறாள். கடைசியில் சிரித்தபடி அவனது சட்டையைப் பிடித்து இழுத்து அவன் மார்பில் சாய்ந்துக்கொள்கிறாள். இப்படியான ரொமான்ஸ் ரசிகர்களுக்கு பிடித்து, இவர்களும் அவர்களாக மாறி ரசித்து பார்க்கிறார்கள், அனுபவிக்கிறார்கள்.