Sembaruthi serial: மனசுக்குள்ளே இருக்கும் மாமாவை கேட்டு முடிவு.. எத்தனை நாளைக்கு?
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி வெளி நாடு போனவர் போனவர்தாங்க...
இன்னும் பிறந்தநாள் வரலே...அவர் அகிலாண்டேஸ்வரி அம்மாகிட்டே உண்மையை சொல்லும் நாளும் வரலே...
பார்வதி மனசுக்குள் இருக்கும் மாமாவை கேட்டு கம்பெனி முடிவுகளை எடுத்துக்கிட்டு இருக்காளாம்...
பார்வதி ஆதி
ஆதி பார்வதியை யாருக்கும் தெரியாமல் ரகசிய கல்யாணம் செய்துகிட்டான். எல்லா உண்மையையும் வருகிற 30ம் தேதி என்னோட பிறந்தநாள் அன்னிக்கு உங்ககிட்டே சொல்றேன்மானு அகிலாண்டேஸ்வரி அம்மாகிட்டே சொன்னான்.
ரெண்டு மாசம்
ஆதி சொல்லி கூட உண்மையில் ரெண்டு மாசம் ஆச்சு. சொல்லி ஒரு மாசத்தில் வெளிநாட்டு போனதா காண்பிச்சாங்க. அப்போலேர்ந்து வெளிநாட்டில் இருந்து அப்பப்போ கால் பண்றதோட சரி.பார்வதி ஃபிளாஷ்பேக்கில் ஆதியுடனான ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் காண்பிக்கிறார்கள்.
மனசுக்குள் மாமா
மனசுக்குள் இருக்கும் மாமாவை கேட்டு அவர் இந்த இடத்தில் இருந்தா எப்படி முடிவு எடுப்பார்னு இந்த சிச்சுவேஷனை ஹேண்டில் பண்ணணும்னு பார்வதி பேசிக்கறது.. முடிவு எடுப்பதுன்னு கதையை கொண்டு போறாங்க. இப்படி செம்பருத்தி சீரியலை ரசிகர்களின் மன ஓட்டத்தை அறிந்து கொண்டு போனாலும் ரெண்டு விஷயம் மிஸ்ஸிங்.
அகிலாண்டேஸ்வரி பிரியா ராமன்
ஆதியாக நடிக்கும் நடிகர் கார்த்திக் ரசிகைகள் ஏமாற்றம் அடையும் படி சீரியலில் அவர் வரவே கம்மியாக இருக்கிறதாம். அதே சமயம் பிரிய ராமனையம் அண்மைய எபிசோட்களில் காணமுடியவில்லை. திகட்ட திகட்ட பார்வதியை மட்டுமே பார்க்க முடிகிறது என்று கூறுகிறார்கள் சீரியல் விரும்பிகள்.