Sembaruthi Serial: ஆதி திரும்ப வந்துட்டேன்னு சொல்லு....!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் பிசினெஸ் விஷயமா வெளிநாடு போன ஆதி, சினிமா ஹீரோ மாதிரி பொண்டாட்டிக்கு ஒரு ஆபத்து வந்த நேரத்தில் காப்பாத்த வந்துட்டாரு.
போயி உன்னை அனுப்பி வச்சவங்ககிட்ட சொல்லு..ஆதி திரும்ப வந்துட்டேன்னுன்னு வேற சொல்லி அனுப்பறான்.
கதைப்படி சில நாட்கள்தான் வெளிநாடு போன ஆதி. நிஜமா ரெண்டு மாசம் ஆச்சு திரும்பி வர.
ஆதி இல்லாமல்
செம்பருத்தி சீரியலில் ஆதி இல்லாமல், பார்க்க பிடிக்கலைன்னு நிறைய வயசு பொண்ணுங்க போனில் ஃபிரட்ண்ஸ் கூட பேசிக்கிட்டாங்களாம். அந்த அளவுக்கு ஆதியாக நடிக்கும் கார்த்திக்குக்கு பெண் ரசிகைகள் அதிகம். கார்த்தி இதுவரை சீனில் வராதது செம்பருத்தி சீரியலின் மிஸ்ஸிங் என்று கூட சொல்கிறார்கள்.
இன்னும் பிறந்தநாள்
பிரச்சனையில் இந்த மாசம் 30ம் தேதி என் பிறந்த நாள் வருது இல்லே அப்போ எல்லா உண்மையையும் சொல்றேன் மான்னு அகிலாண்டேஸ்வரி அம்மாவிடம் சொல்லி ரெண்டு மாசம் ஆச்சு.இன்னும் அந்த பிறந்த நாள் எப்போ வரும்.. ஆதி பார்வதிக்கு நடந்த கல்யாணம் பத்தின உண்மையை எப்போது சொல்வான் என்றுதான் சீரியல் ஆர்வலர்கள் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.
பார்வதிக்கு மாப்பிள்ளை
ஆதி ஊரில் இல்லாத சமயம் பார்வதிக்கு மாப்பிள்ளை பார்த்து வச்சு இருக்காங்க அகிலாண்டேஸ்வரி. பார்வதி கோயிலுக்கு போயிட்டு வரும் போது அந்த மாப்பிள்ளை பையன் பார்வதியிடம் வம்பு இழுக்கும் சமயம் ஆதி, ஹீரோ மாதிரி ஃபாரினிலிருந்து வந்து அவனை அடித்து தள்ளி விடுகிறான்.
வந்துட்டேன்னு சொல்லு
அப்போதுதான் இந்த டயலாக்கை அவனிடம் சொல்லி அனுப்புகிறான் ஆதி.. அதாவது உன்னை அனுப்பினவங்ககிட்ட ஆதி வந்துட்டேன்னு சொல்லுன்னு சொல்லி அனுப்புகிறான். ஆதியை ரசிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட சினிமா டயலாக் தேவைப்படுகிறதுதான்.