For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Sembaruthi Serial: அம்மாவுக்கு மகனா மட்டும் இனி இந்த வீட்டில்...!

Google Oneindia Tamil News

சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் ஆதி பார்வதிக்கு வொர்க்கர்ஸ் கொடுத்த மரியாதை அகிலாண்டேஸ்வரி அம்மாவுக்கு பிடிக்கலை. அப்போதுதான் ஆதி இனிமே எனக்கு இந்த அந்தஸ்து வேண்டாம்..உங்களுக்கு மகனா மட்டும் இருந்துக்கறேன்னு சொல்றான்.

உடனே பார்வதியை அழைச்சுக்கிட்டு வீட்டுக்கும் வந்துட்டான். பார்வதியிடம் இனிமே நாம் ஃபேக்டரிக்கு போக வேண்டாம் பார்வதின்னு சொல்றான். மாமா என்னாலதானே மாமா இதெல்லாம்னு கலங்கறா பார்வதி.

இல்லை.. பார்வதி. என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாதுன்னு எடுத்து சொல்லி அவளுக்கு ஆறுதல் சொல்லி அணைச்சுக்கறான்.

 தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

ஃபேக்டரியில் ஆதிக்கும், பார்வதிக்கும் கிடைத்த தாரை, தப்பட்டை, மேள வாத்தியம் வரவேற்பை பார்த்துட்டு ரொம்ப கோபமா உள்ளே போறாங்க அகிலாண்டேஸ்வரி. அம்மா கோபமா போறாங்கன்னு பின்னாலேயே போயி. அம்மா உங்ககிட்ட நான் பேசணும்னு சொல்றான். அகிலாண்டேஸ்வரி பேசாமல் உட்கார்ந்து இருக்க..கோபமா இருக்கீங்களான்னு கேட்கறான்.

 ஆஸ்தி மரியாதை

ஆஸ்தி மரியாதை

ஆதி.. எனக்கு தெரியாம கல்யாணம் செய்துக்குவீங்க. என்கிட்டே உண்மையை மறைப்பீங்க...ஆனால், என் அந்தஸ்து மரியாதை, சொத்து எல்லாம் மட்டும் உனக்கு வேணும் இல்லையா ஆதின்னு கேட்கறாங்க.அம்மா நீங்க தப்பா நினைச்சுட்டீங்க.. இதனாலதான் நான் உங்ககிட்ட தனியா பேசணும்னு சொன்னேன்.

 எதுவும் கேட்கலை

எதுவும் கேட்கலை

வொர்க்கர்ஸ் மரியாதை செய்தது அவங்களா ஆசைப்பட்டு செய்து இருக்காங்க. நான் எதுவும் கேட்கலைம்மா...நான் உங்களுக்கு மகனா மட்டும் இருக்கணும்னுதான் நீங்க பேசாலேன்ன கூட அந்த வீட்டில் இருக்கணும்னு பார்வதியோட சேர்ந்து இருக்கேன். இன்னிலேர்ந்து உங்க சொத்து, பிசினெஸ் எதிலும் நான் தலையிட மாட்டேன்மா...ஆனால், அந்த வீட்டில் உங்களுக்கு பிள்ளையா மட்டும் இருப்பேன்மான்னு சொல்லிட்டு போயிட்டான் ஆதி.

 பார்வதி போகலாம்

பார்வதி போகலாம்

குட்வில் அம்பாசிடர் பதவியில் இருக்கும் பார்வதியையும் வான்னு சொல்லி அழைச்சுக்கிட்டு வந்து நடந்த விவரத்தை சொல்றான். நீங்க தப்பு பண்ணீட்டீங்க மாமா.. எல்லாம் என்னால வந்ததுதானே என்று சொல்லி புலம்புகிறாள் பார்வதி. பார்வதி உன்னை யாருக்காகவும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது பார்வதி. ஆனால், உனக்காக நான் எதை வேணும்னாலும் விட்டுக் கொடுப்பேன்னு அவளை அணைச்சு ஆறுதல் சொல்றான் ஆதி. பாவம் அகிலாண்டேஸ்வரி அம்மா ஆதியின் இந்த செயலால் மனம் குழம்பி மனசாட்சி கூட பேசிக்கிட்டு இருக்காங்க...பெத்த மனம் பித்து!

English summary
akilanteswari's mother does not like the honor given to adi parvati's workers in zee Tamil tv's semburuthi Serial. then I do not have this status of adi anymore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X