ஆவிகள் ஆயிரம்...ஜெயா டிவியில் திகில்..திகில்!
சென்னை: திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஆவிகள் ஆயிரம் என்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.
காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்று கூட கார்டஸிக்கும் போடுவதில்லை. பேய்..ஆவி என்று கதை போவதால் திகில் விரும்பிகள் இதை பார்த்து வருகிறார்கள். இப்போது இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அனுபவப்பட்டவர்கள் ஆவி கதை சொல்ல அதைக் கேட்டு இருப்பவர்கள், இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, இது கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று மற்றவர்களிடமும் சொல்லிவருகிறார்கள். அப்படி இருக்கிறது ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சி.
சென்னை: திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கு ஜெயா டிவியில் ஆவிகள் ஆயிரம் என்று ஒரு உண்மை சம்பவத்தை அடிப்டையாகக் கொண்டு சித்தரிக்கப்பட்ட காட்சிகளுடன் கூடிய ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள்.
காட்சிகள் சித்தரிக்கப்பட்டவை என்று கூட கார்டஸிக்கும் போடுவதில்லை. பேய்..ஆவி என்று கதை போவதால் திகில் விரும்பிகள் இதை பார்த்து வருகிறார்கள். இப்போது இந்த நிகழ்ச்சி மறு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
அனுபவப்பட்டவர்கள் ஆவி கதை சொல்ல அதைக் கேட்டு இருப்பவர்கள், இந்த நிகழ்ச்சியை பார்த்துவிட்டு, இது கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று மற்றவர்களிடமும் சொல்லிவருகிறார்கள். அப்படி இருக்கிறது ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சி.
மாணவனை செருப்பை கழற்ற சொன்ன அமைச்சருக்கு ஒரு நியாயம்.. பாரதிக்கு ஒரு நியாயமா.. சிபிஎம் அதிரடி
மல்லிப்பூ காரை நிறுத்தும் பெண்
தலை நிறைய மல்லிப்பூ வைத்துக்கொண்டு, வெள்ளை புடவையில் நட்ட நடு ராத்திரியில் காரை வழி மறித்து நிற்கிறாள் ஒரு பெண். காரில் இருந்து இறங்கிப் பார்த்தால் பெண் மாயம். ஆனால், இந்த ஆவி தொடர்ந்து இவர்களை எதாவது ஒரு விதத்தில் டிஸ்டர்ப் செய்துக்கொண்டே இருக்கிறது. இது ஒரு கதை...
கூப்பிடும் தூக்கு கயிறு
இரவு படுத்து தூங்கிக்கொண்டு இருக்கிறான் ஒரு இளைஞன். அவனை வா வா என்று கூப்பிடுகிறது தூக்கு கயிறு. திடுக்கிட்டு விழித்தால் அது கனவு. ஆனால், இந்த கனவுக்கும் இளைஞனுக்கும் ஏதோ தொடர்பு. அடிக்கடி இந்த கயிறு இவனை கூப்பிடுகிறது. கயிருடன் தொடர்புடைய ஒரு இளம் பெண்ணின் கதையும் இருக்கிறது.
பில்லி சூனியம் ஏவல்
இத்தோடு பில்லி, சூனியம், ஏவல் ஆவியை அடக்குதல் என்றும் உண்மை சம்பவம் போகிறது. அதை ஒட்டிய கதையாக எடுக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சித்தரிக்கப்பட்டவை என்று போட்டு இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
திகில் பயம்
இப்போது எல்லாம் மக்கள் எதில் திகில் இருக்கு, பயம் இருக்கு என்று தேடிப் பார்க்க ஆரம்பித்து இருக்கின்றனர். அது அவர்களுக்குள் ஒரு த்ரில்லை தருகிறது.அந்த வகையில் பலருக்கும் பிடித்து இருக்கிறது ஜெயா டிவியின் ஆவிகள் ஆயிரம் நிகழ்ச்சி. ஒவ்வொரு எபிசோடுக்கும் வெவ்வேறு தலைப்புக்களில் ஒளிபரப்பாகி வருகிறது ஆவிகள் ஆயிரம்.