பிரபல தயாரிப்பாளர் மரணத்துக்கு பிரபலங்கள் யாருமே போகலையா.. என்ன கொடுமை இது!
சென்னை: விஜயா வாகினி புரொடக்ஷன்ஸ் பி.நாகிரெட்டியின் இளைய மகன் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் பி.வெங்கட்ராம ரெட்டி கடந்த 12ம் தேதி காலமானார். அவருக்கு வயது 75.
அவரது மனைவி பெயர் பி.பாரதிரெட்டி. இவருக்கு ராஜேஷ் ரெட்டி என்ற மகனும், ஆராதனா ரெட்டி, அர்ச்சனா ரெட்டி என்று இரு மகள்களும் உள்ளனர்.
பி.வெங்கட்ராம ரெட்டி தமிழில், நடிகர் விஜயின் ஆரம்ப கால படமான ரசிகன், செந்தூரபாண்டி லேட்டஸ்டாக பைரவா போன்ற படங்களைத் தயாரித்தவர்.
நடிகர் விஷாலின் தாமிரபரணி, தனுஷின் படிக்காதவன், வேங்கை, நடிகர் அஜீத்தின் வீரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். தற்போது இவரது தயாரிப்பில் சங்கத்தமிழன் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
12ம்தேதி இவர் மரணமடைந்தார். இவரது இறுதி அஞ்சலி சென்னை நெசப்பாக்கத்தில் நடைப்பெற்றது என்றாலும், இவரின் படத்தில் நடித்த ஒரு பெரிய நடிகர் கூட அதில் கலந்துகொள்ளவில்லையாம். நடிகர் ஸ்ரீமன் மட்டும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினாராம்.
கதை கேளு... கதை கேளு.. அம்மாவும் பிள்ளையும் சொல்லிக்கிட்ட கதை கேளு...!
விஜய் சேதுபதி லாபம் ஷூட்டிங்கிலிருந்து வந்தும் இன்னும் கூட அவர் வீட்டாரிடம் சென்று துக்கம் விசாரிக்கலையாம். அஜீத் மேனேஜர் நேரில் சென்று பார்த்து, அஜீத் இரண்டு அல்லது மூன்று நாளில் ஷூட்டிங் முடிந்து வந்து துக்கம் விசாரிப்பதாக சொன்னார் என்கிற தகவலை சொன்னாராம்.
என்ன நம்ம தயாரிப்பில் நடித்த நடிகர்கள் இப்படி வராமல் போய்விட்டார்களே என்று குடும்பமே வருத்தத்தில் இருக்காங்களாம்
மற்ற பெரிய நடிகர்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லையாம்... இப்படியும் இருப்பார்களா?.. இதுதான் சினிமா போல!