இந்த மூனும் ரொம்ப முக்கியம்.. சின்னத்திரை அம்மு சொல்லும் ரகசியம்.. கப்புன்னு பிடிச்சுக்கங்க
சென்னை: கலைஞர் தொலைக்காட்சியின் நம்ம வீட்டு நட்சத்திரம் பல பிரபலங்களின் நல்ல குணங்களை அறிய வைப்பதா இருக்கு.
இதை தெரிஞ்சு நாங்க என்ன பண்ணப் போறோம்னு நினைக்கலாம். இப்படிப்பட்ட நல்ல விஷயங்களும் இருக்குதான்னே தெரியாம பல பேர் இருக்கோம்.
இதனால எத்தனையோ நல்ல விஷயங்களை கோட்டை விட்டுட்டு அடடான்னு வருத்தப்படறோம். ஸோ, அம்மு சொல்றதையும் கேட்போமே...
நோ தன்மானம்
வாழ்க்கையில வேலை ரொம்ப ரொம்ப முக்கியம்.அப்போ நம்மோட தன்மானத்துக்கு இழுக்கு வர மாதிரி இருந்தா, உடனே தாம் தூம்னு குதிச்சு வேலையை விட்டுட்டு வந்துட மாட்டேன். எனக்கு என்னோட வேலைதான் முக்கியம். அதனால தன்மானத்துக்கு இழுக்கு வராதபடி என்னை சுத்தி இருக்கும் சூழ்நிலையை மாத்திக்குவேன்.
லூசுல விடு
எனக்கு பல நேரங்களில் பல இடங்களில் நிறைய அவமானம் கிடைச்சு இருக்கு. இதை அவார்டு கிடைச்ச மாதிரி நினைச்சுகிட்டு லூஸ்ல விட்ருவேன். முக்கியமா பார்த்து வேலை செய்யற இடத்துலதான் இது நடக்கும். இதை மனசுலயும், மைண்டலயும் வச்சுக்க மாட்டேன்.இதுக்கு லாயக்கில்லைன்னு சொன்னவங்க இவ செய்துட்டாளேன்னு ஆச்சரியப்படும்படி வேலையை செய்து முடிப்பேன்.என்னை பொறுத்த வரைக்கும் அவமானம் வெற்றி படிக்கட்டுதான்.
அம்மா, கே.பி.சார்
என்னை நிறைய பேர் பாராட்டினாலும் கே.பி.சார் நாடகத்துல நடிச்சப்போ அவர் என்னை பாராட்டினது மிகப் பெரிய வெகுமானம்.தினமும் என்னை அம்மா பாராட்டுவது வெகுமானம். மத்தபடி சொல்லிக்கற மாதிரி வெகுமானம் இல்லை.
நல்லாவே வரும்
எனக்கு காமெடி நல்லாவே வரும்.. சந்தானம் சார் கூட மந்திர புன்னகை படத்துல நடிச்சது நல்ல அனுபவம். அவர் ஹீரோவானதுல எனக்கு ரொம்ப வருத்தம்தான். முதல்ல காமெடி நடிகைங்களுக்குத்தான் பஞ்சமா இருந்துச்சு இப்போ காமெடி நடிகர்களுக்கும் பஞ்சமாயிருச்சு.. என்கிறார்.
டப்பிங், நடிப்பு, நடனம் என்று கலக்கும் அம்மு விரும்பியது போல நல்ல காமெடி நடிகையாகவும் வர வாழ்த்துக்கள் சொல்வோம்.