பச்சை நிற சேலையில்.. ஏக்கத்துடன் போஸ்ட் போட்ட நீலிமா.. ஆறுதல் தந்த ரசிகர்கள்
சென்னை: லாக் டவுன் டைம்ல மக்களின் அன்றாட வாழ்க்கை ரொம்பவே பாதித்து இருக்கு. அது திரைத்துறையினரும் விட்டுவைக்கவில்லை.
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை நடிகர்கள் நடிக்க தடை விதித்ததால் எல்லோரும் வீட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு நேரம் போகவும் ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பதற்காகவும் சமூகவலைத்தளங்களில் போட்டோக்களை அப்லோட் பண்ணிட்டு வராங்க.
அந்த வகையில் சின்னத்திரை நடிகை நீலிமா தன்னுடைய போட்டோக்களை அப்லோட் பண்ணி இருக்கிறார். அவருடைய ரசிகர்கள் அவருடைய போட்டோக்கு லைக்குகளையும் கமெண்ட் களையும் அள்ளிக் கொடுத்து இருக்கிறார்கள்.
கணவர் காலில் ஏறிய ஸ்ரீதேவி.. உட்கார வேற இடமே இல்லையா ?
குட்டிப் பாப்பாவாக
நீலிமா ராணி தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி இருப்பவர். சினிமாக்களில் துணை கதாநாயகிகளாக சின்னச் சின்ன ரோல்களில் நடித்து இருந்தாலும் சின்னத்திரையில் இவர்களுக்கு ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. தலையணைப் பூக்கள் அரண்மனைக்கிளி போன்ற தொடர்களில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.
அரண்மனைக் கிளி வில்லி
அரண்மனைக்கிளி சீரியலில் இவர் வில்லி கேரக்டரை பண்ணி இருந்தாலும் ரசிகர்களின் மனதில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. இவருடைய அழகு, குழந்தைத்தனமான முகமும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட். சீரியல்களில் வில்லியாக நடித்தாலும் உண்மையில் நிஜவாழ்க்கையில் ரொம்ப சாப்டான கேரக்டராம். டிக் டாக் டப்ஸ்மாஷ்களில் கலக்கி வந்தவர்.
20 வயசிலேயே கல்யாணம்
20 வயதிலே திருமணம் செய்துகொண்டு ஒரு பெண் குழந்தைக்கு தாயாகவும் ஆன நீலிமா தற்போது எடையை குறைத்து கதாநாயகிகளே பொறாமை கொள்ளும் அழகியாக மாறியிருக்கிறார். தற்போது இவர் திரைப்படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். கருப்பன் காட்டு வலசு என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறாராம். அதில் மூட நம்பிக்கைகள் நிறைந்த ஒரு கிராமத்தை மாற்றும் கேரக்டராக நடிப்பதாகவும் தெரிகிறது.
பச்சை நிற சேலையில் பாந்தம்
கடந்த ஜூன் மாதம் வரை மக்கள் ஏகப்பட்ட கஷ்டங்களை சந்தித்து விட்டார்கள் இனி வரும் ஜூலை மாதம் ஆவது நமக்கு நல்ல தாய் வரவேண்டும் அப்படின்னு பச்சை வண்ணத்தில் சேலையை கட்டி ஜூலை எங்களுக்கு பச்சை வண்ணமாக வா என்று அழைத்து போஸ்ட் போட்டு இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் கமெண்டில் ஆறுதலாக பேசி ஊக்கமளித்து வருகின்றனர்.