கன்னக் குழி சிரிப்பு.. கிறங்கடிக்கும் ரேஷ்மா.. கொஞ்சி மகிழும் ரசிகர்கள்!
சென்னை: பூச்சூடவா சீரியல் நாயகி ரேஷ்வுக்கு கன்னக் குழிதான் பேரழகே.. அந்த பேரழகில் சிக்கி கிறங்கிப் போய்க் கிடக்கின்றனராம் ரசிகர்கள்.
இந்த லாக்டோன் நேரத்துல சீரியல்கள் நடிக்க முடியாது. அதனால சின்னத்திரை நடிகைகள் வீட்டிலிருந்து டிக்டாக் மற்றும் புது போட்டோக்களை இணையதளத்திலும் போட்டு ரசிகர்களை ஆனந்த படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில்தான் கன்னக்குழி அழகி ரேஷ்மாவும் தன்னுடைய வீடியோக்களை இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார். இதற்கு லைக்கள் பிச்சிக்கிட்டு போகுது.
மிருகங்களை விடவா கேவலமா ஆகிவிட்டது மனித உயிர்கள்.. கதறி அழுத ஜனனி!
மாடல் அழகி
ரேஷ்மா மாடலிங் துறையில் தான் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார். 2015இல் சென்னையில் நடந்த பேஷன் ஷோவில் முதல் 10 இடத்திற்குள் வந்திருந்தார் 2016 இல் நடந்த ஃபேஷன் ஷோவில் இரண்டாவது runner-up ஆகவும் வந்திருக்கிறார். அதன்பிறகு ஜீ தமிழ்ல ராகவ் உடன் இணைந்து டான்ஸ் ஜோடி டான்ஸ் மூலம் தமிழ் ரியாலிட்டி ஷோவில் அறிமுகமானார்.
நடன வெறி
இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது. அவர் நடிப்பின் மீது உள்ள வெறியையும் நடனத்தின் மீது அவருக்கு இருக்கிற காதலையும் இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தான் இவருக்கு பூவே பூச்சூடவா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் இவர் சக்தியாக நடித்திருப்பார் .இவர் சக்தியாக நடித்தார் என்று சொல்வதை விட சக்தியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்.
மொய்க்கும் ரசிகர்கள்
இந்த சீரியலுக்கு பிறகு இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகி விட்டது. இது இவர் நடித்திருக்கும் போல்டான கேரக்டர் எல்லா குடும்ப பெண்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மேலும் அவர் எந்த சூழ்நிலைக்கும் தன்னுடைய புன்னகையை மட்டுமே பதிலாக அளிக்கும் கேரக்டர் அவருக்கு பிளஸ் பாயிண்ட். இவருடன் நடித்திருக்கும் பாட்டி கேரக்டர் நகைச்சுவையின் உச்சகட்டம். அந்த பாட்டி கேரக்டரும் சேர்ந்து செய்யும் சேட்டைகள் ரசிகர்கள் ரசிக்கும்படி இருக்கிறது.
அசத்தல் யோகா
இப்ப என்னன்னா சீரியல்கள் இல்லாததனால் வீட்டில இவங்களுக்கு போரடிக்குதா அதனால இவங்க பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டிக் டாக் எடுத்து சம்பவ சமூகவலைத்தளங்களில் பரப்பி வருகிறார்கள். மேலும் இவருடைய மொட்டைமாடி போட்டோக்களையும் யோகா போன்ற வீடியோக்களையும் தன்னோட இன்ஸ்டாகிராம்ல அப்லோட் பண்ணி இருக்கிறார் .இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.