Kalyana Parisu Serial: இவர் பிரச்சனைக்கு உரிய மனுஷன்தான்... சொல்லிக்கிறாய்ங்க
சென்னை: கடந்த சில நாட்களாக சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ஜெயஸ்ரீ தம்பதி பிரச்சனை இண்டஸ்ட்ரியில் பரவலாக பலரையும் பேச வைத்துள்ளது. உண்மையில் ஈஸ்வர் பிரச்சனைக்கு உரிய மனுஷன் என்பதுதான் பலரும் கூறும் கருத்து.
ஈஸ்வருக்கு தான் பெரிய ஆணழகன் என்கிற கர்வம் என்று உடன் நடிக்கும் நடிகைகள் புகாராகவே கூறுகிறார்கள்.
பெரிய மாதவன்.. சாக்லேட் பாய்.. அரவிந்த் சாமி என்றும் பொருமுகிறார்கள் உடன் நடித்து பிரச்சனையால் நொந்துகொண்ட நடிகைகள்.
கல்யாண பரிசு
கல்யாண பரிசு முதல் சீசனில் ஈஸ்வர் நடித்தார். அப்போது சூர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்த ஈஸ்வருக்கு இரண்டு பேர் காதலிப்பது போன்ற கதாபாத்திரம். அப்போதே இவருக்கு தான் ஆணழகன் என்கிற கர்வம் தலைக்கேறி விட்டது என்று கூட உடன் நடிக்கும் நடிகைகள் கூறினார்கள்.
நடிக்கும் நடிகை
அப்போதே உடன் நடிக்கும் நடிகையுடன் பிரச்சனை ஏற்பட்டு, அவரது மனைவி வரை அந்த பிரச்சனை செல்ல, இது நமக்கு ஒத்துவராது என்று வந்த நடிகை அந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். ஆனால், பெங்களூருவில் இருந்து வந்து நடித்த மெயின் கதாபாத்திர நடிகை சீக்கிரமே சீரியலை முடிக்க சொல்லி முழுவதுமாக நடித்து கொடுத்துவிட்டு சட்டு புட்டு என்று கல்யாணம் முடித்துக் கொண்டு செட்டிலாகி விட்டார்.
கல்யாண பரிசு சீசன் 2
கல்யாண பரிசு சீசன் 2 வில் இந்த பிரச்சனை எல்லாம் வேண்டாம் என்று முழுவதுமாக அந்த குரூப் அத்தனையையும் அப்படியே தூக்கிவிட்டு, முற்றிலும் புதிதாக புது நடிகர் நடிகை என்று வேறு குரூப்பை போட்டு இப்போது வேறு பட்டாளத்தை வைத்து கடந்த இரண்டு வருடத்துக்கும் மேலாக கல்யாண பரிசு சீசன் 2 எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
பாடு திண்டாட்டம்தான்
குடும்பத்தில் மனைவியுடன் எதாவது பிரச்சனை என்றால் அதை உடன் நடிப்பவர் அல்லது தென்படுபவர்களிடம் காண்பிக்கும் ஈஸ்வர் ஒரு முசுடுதான். இவரை வைத்து ஒரு சப்ஜெக்டை எடுத்து சக்ஸஸ்ஃபுல்லாக முடித்துவிட்டு வெளியில் வருவதற்குள் படு திண்டாட்டம் என்றுதான் கல்யாண பரிசு டீம்காரர்களின் முந்தைய புலம்பலாக இருந்தது என்பதுதான் உண்மை.