Mahabharath Channel: ஏர்டெல் துவங்கி இருக்கும் மகாபாரதம் சானல்!
இந்தியா: டிஜிட்டல் டிவியான ஏர்டெல் டிஷ் ஆன்டெனா மூலம் டிஜிட்டல் கனெக்ஷனில் தொலைக்காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது. இப்போது ஏர்டெல் டிஷும் ஏர்டெல் டிவி என்று மகாபாரதம் சானல் ஆரம்பித்து இருக்கிறது.
மாத கட்டணம் ஒரு ரூபாய் மட்டுமே...நேற்று முதல்தான் மகாபாரதம் என்று ஒரு சானலை ஏர்டெல் ஒளிபரப்பி வருகிறது.கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் டிடி நேஷனல் மகாபாரதம் இதிகாச காவியத்தை ஒளிபரப்பத் துவங்கி உள்ள நேரத்தில்....
நீங்க மகாபாரதம் என்று சீரியலை காலை மலை என்று மட்டும்தானே ஒளிபரப்புவீர்கள்...மகாபாரதம் என்று ஒரு சானல் ஆரம்பித்து அதில் எப்போதும் மகாபாரதம் மட்டுமே ஒளிபரப்பு செய்கிறோம் பாருங்கள் என்பது போல இருக்கிறது ஏர்டெல் நெட்வொர்க்கின் வேலை.
ஏர்டெல்லில் டிஜிட்டல் டிவி
ஏர்டெல் டிஜிட்டல் கனெக்ஷன் வைத்திருப்போர், தொலைக்காட்சியை ஆன் செய்ததும் முன்பெல்லாம்..பே செய்வது குறித்து. அல்லது மற்ற நிகழ்ச்சிகள் முறித்து மட்டும்தான் விளம்பரம் செய்யும். இப்போது டிவியை ஆன் செய்தாலே மகாபாரதம் சானல் குறித்துத்தான் ப்ரோமோ செய்து வருகிறது டிஷ் டிவி.
ஒரு ரூபாய் கட்டணம்
வெறும் ஒரு ரூபாய் கட்டணம் செலுத்தினால் மட்டும் போதும், ஏர்டெல் டிஜிட்டல் டிவியின் மகாபாரதம் இதிகாச தொடரை மகாபாரதம் சானலிலேயே கண்டு களிக்கலாம்.எப்போதும் இதில் மகாபாரதம்தான் ஒளிபரப்பாகி வருவதாகத் தெரிகிறது.
இப்போதைக்கு இதுதானோ
மகாபாரதம் டிவி சானல் பற்றிய திட்டமிடல் எதுவும் இல்லை என்றும், இப்போதைக்கு மகாபாரதம் மட்டுமே அடுத்தடுத்து ஒளிபரப்பாகி வருமோ என்கிற சந்தேகத்துக்கு ஏற்ப ஒரு ரூபாய் கட்டணம் கட்டி மகாபாரதம் சானலில் இணைந்துவிட்டால் போதும்...விடை தெரிந்துவிடும்.
லாக்டவுன் குழப்பம்
கோவிட் 19 தொற்று லாக்டவுன் நேரத்தில் மக்கள் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறார்கள். குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பவர்கள் ஏராளம் என்று கூறுவது போல தொலைக்காட்சிகள் பல நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்பு செய்து வருகின்றன. அதில் மகாபாரதம், ராமாயணம், ஸ்ரீ கிருஷ்ணா போன்ற புராண கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நிலையில், ஏர்டெல் டிவி ரொம்ப ரொம்ப மேலே போய்...மகாபாரதம் என்று ஒரு சானல் ஆரம்பித்து இருக்கிறது.