Sembaruthi Serial: பார்வதி சாப்பிடலேன்னு அகிலாண்டேஸ்வரி கூட சாப்பிடலையே..!
சென்னை: ஜீ தமிழ் டிவியின் செம்பருத்தி சீரியலில் நடிகை பிரியா ராமனின் மிடுக்கான நடிப்பு, ஸ்டைலான நடை அதிகார தோரணை எல்லாமே கதைக்கு நன்றாக ஒட்டிப் போகிறது.
வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக் காரணமாக பார்வதி உண்ணா விரதம் இருக்கிறாள். பார்வதி உண்ணா விரதம் இருக்கிறாள் என்று அகிலாண்டேஸ்வரியும் சாப்பிடலை.
அகிலாண்டேஸ்வரி கணவர், இளைய மகன் இருவரும் கூட சாப்பிடலை. வனஜாவும் மித்ராவும் மட்டும் வயிறு முட்ட சாப்பிட உட்காருகிறார்கள்.
குட்வில் அம்பாசிடர்
பார்வதி குட்வில் அம்பாசிடர் பொறுப்பு ஏற்றதில் மார்க்கெட்டிங் பொறுப்பில் இருந்தவர்கள். தாங்கள் சேல்ஸ் இன்க்ரீஸ் செய்துவிட்டோம் என்று பார்வதியிடம் பார்ட்டி கேட்கிறார்கள். பார்வதியும் அகிலா அம்மாவிடம் கேட்டு பார்ட்டிக்கு ஏற்பட்டு செய்ய. ஒரு பெரிய லெக்சர் கொடுத்த பின்னர்தான் பார்ட்டிக்கு ஒப்புக் கொள்கிறார் அகிலாண்டேஸ்வரி.
அடுத்த நாள்
ஆனால் அடுத்த நாளே, மார்கெட்டிங்கில் நாங்கள்தான் நம்பர் ஒன், இல்லை நாங்கள்தான் நம்பர் ஒன் என்று சேல்ஸ் .. இல்லை நாங்கள்தான் நம்பர் ஒன் என்று புரடக்ஷன் யார் நம்பர் என்று போட்டி வர...இல்லை நீங்கள்தான் யார் நம்பர் ஒன் என்று டிக்ளேர் செய்ய வேண்டும் என்று வொர்க்கர்ஸ் ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்து விடுகிறார்கள்.
நான் சொன்னேன்
நான் சொன்ன மாதிரி ஆகிப் போச்சு என்று அகிலாண்டேஸ்வரி அம்மா சொல்ல, பார்வதி நான்தான் உங்களுக்கு அம்மாகிட்டே பேசி பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தேன் கடைசியில் அம்மா சொன்ன மாதிரி உங்களுக்குள்ள நீ பெரியவனா நான் பெரியவனான்னு உங்களுக்குள்ள ஈகோ வந்துருச்சுல்ல.
அம்மா சொன்ன
நீங்க எல்லாரும் சமம்னு அம்மா சொன்ன மாதிரி உணர்ந்து வேலைக்கு திரும்பும் வரைக்கும் நானும் உங்க முன்னாடி உட்கார போறேன்.ஆனா, நான் உங்களை மாதிரி ஸ்ட்ரைக் பண்ண போறதில்லை. உண்ணா விரதம் இருக்க போறேன்னு சொல்லி உட்கார்ந்துடறா.
அன்னிக்கு ராத்திரிதான் வீட்டில் அகிலாண்டேஸ்வரி அம்மாவும் பார்வதி சாப்பிடலேன்னு சாப்பிடலை. அகிலாண்டேஸ்வரி சாப்பிடலேன்னு அவங்க ரெண்டாவது பிள்ளை அவங்க கணவர் ரெண்டு பேரும் சாப்பிடலை. இப்படி நல்ல குடும்ப அமைப்போடு கதை போகுது.