Thenmozhi BA serial: பாவம்.. அது ஒண்ணும் சாதிக்கலை.. பதவிக்காக அதுவா நடக்குது!
சென்னை: தேன்மொழி பிஏ சீரியலில் அருள்வேலை காதலிச்சு எல்லாம் ஒண்ணும் தேன்மொழி கல்யாணம் செய்துக்கலை. பதவிக்காக எல்லாம் அதுவா நடக்குது.
ஊராட்சி மன்றத் தலைவியா தேன்மொழி ஜெயிச்சுட்டா. எம்எல்ஏ பதவி வேணும்னா உங்க வீட்டில் ஊராட்சி மன்ற தலைவர் இருக்கணும்னு கட்சித் தலைமை சொல்லிட
ஜெயிச்ச பொண்ணை வீட்டு மருமகளாக்கிக்கற தந்திரத்தை கையில் எடுத்துக்கறார் முன்னாள் தலைவர்.
பொண்ணு காந்திநகர்காரி
பெண்ணின் கழுத்தில் தாலி ஏறுவதற்குள் மாமியார் கல்யாணத்தை தடுத்து நிறுத்த பல வேலைகள் பார்க்கறாங்க. பொண்ணு காந்திநகர்காரின்னு கரிச்சு கொட்டறாங்க. இதை வச்சு நாம புரிஞ்சுக்கணும். அப்பட்டமா அப்படியே சொல்லிட்டா குத்தமா போயிரும். இதுவும் ஒரு தீண்டாமைதான்.
வெறுக்கறாங்க மாமியார்
ஆரம்பத்தில் இருந்து தேன்மொழிக்கு மாமியாரா வரப்போறவங்க அந்த காந்தி நகர்க்காரி இந்த வீட்டுக்கு மருமகளா வரதா.. அருளு.. அவளைத் தொட்டு தாலி காட்டினாலும் அவ கூட ஒரு நாள் கூட் வாழ மாட்டேன்னு சத்தியம் செய்டான்னு மகன்கிட்ட சத்தியம் வாங்கிக்கறாங்க.
ஆசைப்பட்ட மாமனார்
மாமனார் பதவிக்கு ஆசைப்பட்டு தேன்மொழியை மருமகள்ஆக்கிக்க நினைச்சு அருள்வேலுக்கு பேசி முடிக்கறார். அவர் ரொம்ப நல்லவரா ஜாதி மத பேதம் பார்க்காமல் இருப்பது, கதைக்கும் நன்றாக இருக்கிறது. உண்மைக்கும் உதாரணமாக இருக்கிறது.
கல்யாணம் நடக்கிறது
கல்யாணம் நல்லபடியாக நடக்கும்போது மாமியார் தேவையில்லாமல் தேன்மொழியை நினைச்சதை சாதிச்சுட்டேன்னு மனசுக்குள் பொருமுவது உண்மை இல்லை. தேன்மொழி எதையும் நினைக்கலை. பதவிக்காக அருள்வேலின் தந்தை நினைச்சதை சாதிச்ச தேன்மொழியை மருமகளாக கொண்டு வந்துவிட்டார்.
தேன்மொழிக்கு எல்லாம் தானாக நடந்து முடிந்துவிட்டது. ஹீரோ சார் ஹீரோ சார் என்று எட்டத்தில் நின்று மலைத்து அருள்வேலை பார்த்தவள் இப்போது ஹீரோ சாரின் மனைவியாக ஆகிவிட்டாள்.